உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 02, 2010

இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலையில் ஓய்வு பெற்ற உறுப்பினர்களுக்கு குறைந்தபட்ச பென்சன் வழங்க தொழிலாளர் பென்ஷனர்கள் சங்கம் கோரிக்கை

திட்டக்குடி: 

              பெண்ணாடம் தொழிலாளர் பென்ஷனர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பென்ஷன் தொகையை 3 ஆயிரமாக உயர்த்தி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த சங்கத் தலைவர் மரியநாயகம் முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: 

                இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலையில் ஓய்வு பெற்ற 700 உறுப்பினர்களுடன் மேற்கண்ட சங்கம் இயங்கி வருகின்றது. இ.பி.எப்., பென்ஷன் திட்டம் 1971 மற்றும் 16.11.1995ன் படி குறைந்த பட்ச அளவு பென்ஷனாக ரூ. 300, 400, 500 என பெற்று வாழ்வின் கடைசி நிலையில் உள்ளோம். இதுவும் எங்களது சம்பளத்தில் பிடித்தம் செய்த இ.பி.எப்., பண்டுக்கு செலுத்தி அதன் மூலம் தரப்படுகிறது. இதற்கென அமைக்கப்பட்ட இ.பி.எப்., மத்திய கமிட்டி போர்டு சிபாரிசு செய்தும், ஏப்ரல் 2000 முதல் இது நாள் வரையிலும் வழங்கப்படவில்லை.இது குறித்து மாநில, மத்திய அரசுகளுக்கும், எம்.பி.,- எம்.எல்.ஏ., என பலருக்கும் மனு அனுப்பியும் எந்த நிவாரணமும், பென்ஷனும் உயரவில்லை. மாறாக மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் அகவிலைப்படி உயர்வு முலம் பென்ஷன் உயர்த்தப்பட்டு வருகிறது. கடுமையான விலையேற்றத்தால் குறைவான பென்ஷன் மூலம் ஜீவனம் செய்ய முடியவில்லை. எனவே குறைந்தபட்ச பென்ஷன் 3,000 ரூபாய்  எனவும், ஏப்ரல் 2000 முதல் இதுநாள் வரையிலான அரியர்ஸ் தொகையை வழங்க நடடிக்கை எடுக்க வேண்டும்.இறவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior