உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 02, 2010

சிதம்பரம் அடுத்த தில்லைவிடங்கில் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம்

கிள்ளை: 

                  சிதம்பரம் அடுத்த தில்லைவிடங்கில் சுனாமியால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடந்தது.லுத்ரன் வேர்ல்டு சர்வீஸ் தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த முகாமிற்கு திட்ட அலுவலர் பாபு தலைமை தாங்கினார். கிராம தன்னார்வலர் மதிக்குமார் வரவேற்றார். பகுதி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஷீலா, ரஜ்ஜித்கீதா முன்னிலை வகித்தனர். முகாமில் பங்கேற்ற இளைஞர்களுக்கு முன்னெச்சரிக்கை, முதலுதவி, தேடுதல் மற்றும் மீட்பு பணிகள், சுகாதாரம் குறித்து திருமுருகன், சிவசுப்ரமணியன் உள்ளிட்ட குழுவினர் பயிற்சி அளித்தனர்.  முகாம் ஏற்பாடுகளை களப்பணியாளர்கள் மகாலட்சுமி, தெய்வநாயகி செய்திருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior