உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 02, 2010

பழுதடைந்த சாலைகளை சீரமைக்கா விடில் பொது நல வழக்கு

விருத்தாசலம்: 

              பழுதடைந்த சாலைகளை சீரமைக்காவிட்டால் நெடுஞ்சாலை துறை மீது பொதுநல வழக்கு தொடரப்படும் என விருத்தாசலம் நுகர்வோர் உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு கல்வி விழிப்புணர்வு மையம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து விருத்தாசலம் நுகர்வோர் உரிமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு கல்வி விழிப்புணர்வு மைய தலைவர் செந்தமிழ்ச் செல்வன் உதவி கோட்ட பொறியாளருக்கு அனுப்பியுள்ள கடிதம்:

                 விருத்தாசலத்தில் பஸ் நிலையம், ஜங்ஷன் ரோடு, பாலக்கரை, உழவர்சந்தை ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் மிகவும் பழுதடைந்து விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதே நிலையில் கடந்த நான்கு மாதங்களாக சாலைகள் இருந்தும் நெடுஞ்சாலைத் துறை அலட்சியமாக உள்ளது.தென்கோட்டைவீதி, ஜங்ஷன்ரோடு உள்ளிட்ட இடங்களில் சாலை விரிவாக்கப்பணி முழுமையாக நடைபெறாமல் அரைகுறையாக உள்ளது. எனவே உடனடியாக பழுதடைந்த சாலைகளை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் நெடுஞ்சாலைத் துறை முன் கண்டன ஆர்பாட்டமும், பொதுமக்கள் நலன் கருதி நெடுஞ்சாலை துறை மீது பொது நல வழக்கும் தொடரப்படும். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior