உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 12, 2010

கடலூர் அரசு மருத்துவமனையில் பாலியல் தொல்லை: இருவர் கைது

கடலூர் : 

                கடலூர் அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் நோயாளிகளுடன் வரும் பெண்களிடம் பாலியல் தொல்லை கொடுத்து வந்த இருவரை போலீசார் கைது செய்தனர். 

                   கடலூர் அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவமனையில் தங்கியுள்ள நோயாளிகளுடன் வந்து தங்கும் பெண்களிடம் சில விஷமிகள் பாலியல் தொல்லை மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் வண்ணாரப்பாளையத்தைச் சேர்ந்த பாலமுரளி தனது தம்பியை கடலூர் அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்துவிட்டு அவரும், அவரது தாய் வாசுகியும் தங்கியிருந்தனர்.தனியாக இருந்த வாசுகியிடம் கடலூர் வில்வநகர் பகவதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் குணாளன் (29), ஜெயராமன் மகன் சுரேஷ் (27) ஆகியோர் வாசுகியிடம் அறுவருக்கத்தக்க வகையில் பேசி தகாத உறவுக்கு அழைத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த வாசுகி கூச்சலிடவே அவரது மகன் பாலமுரளி தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த குணாளன், சுரேஷ் இருவரும் பேனா கத்தியைக் காட்டி கொலை செய்து விடுவதாக மிரட் டினர்.இது குறித்து பாலமுரளி கொடுத்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மூர்த்தி ஆகியோர் வழக்குப் பதிந்து குணாளன், சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior