உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 23, 2009

மசூதி நிலத்​தில் ஏர் ஓட்​டி​ய​தால் பர​ப​ரப்பு

பண் ​ருட்டி,​ நவ. 22: ​

மசூதி நிர்​வா​கத்​தால் குத்​தகை விவ​சா​யி​க​ளி​டம் இருந்து கைய​கப்​ப​டுத்தி வேலி அமைத்​தி​ருந்த நிலத்​தின் வேலியை அகற்றி குத்​தகை விவ​சா​யி​கள் ஞாயிற்​றுக்​கி​ழமை ஏர் ஓட்​டி​ய​தால் கானஞ்​சா​வடி கிரா​மத்​தில் பர​ப​ரப்பு ஏற்​பட்​டது.​ ​ பண்​ருட்டி வட்​டம் கானஞ்​சா​வடி கிரா​மத்​தில் மசூ​திக்கு சொந்​த​மான சுமார் 100 ஏக்​கர் நிலம் உள்​ளது. இந்த நிலத்​தில் அக்​கி​ரா​மத்தை சேர்ந்த குத்​தகை விவ​சா​யி​கள் பலர் கடந்த மூன்று தலை​மு​றை​யாக விவ​சா​யம் செய்து வரு​கின்​ற​னர். இந்​நி​லை​யில் ​ சிதம்​ப​ரத்​தைச் சேர்ந்த மீர்​அ​மீது,​ அமீர்​பாஷா ஆகி​யோர் மசூதி பரா​ம​ரிப்பு நிலத்தை மீட்​கும் பணி​யில் ஈடு​பட்டு கடந்த சில வாரங்​க​ளுக்கு முன் போலீஸ் உத​வி​யு​டன் நிலத்​தைச் சுற்றி கம்பி வேலி அமைத்​த​னர். இந்​நி​லை​யில் ஞாயிற்​றுக்​கி​ழமை 20க்கும் மேற்​பட்ட குத்​தகை விவ​சா​யி​கள் கம்பி வேலியை அகற்றி ஏர் ஓட்​டி​ய​தால் பர​ப​ரப்பு ஏற்​பட்​டது. தக​வல் அறிந்த காடாம்பு​லி​யூர் சப்-​இன்ஸ்​பெக்​டர் சுப்​பையா உள்​ளிட்ட போலீ​ஸôர் சம்​பவ இடத்​துக்​குச் சென்று குத்​தகை விவ​சா​யி​களை கலைந்து போக செய்​த​னர்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior