உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 23, 2009

குழந்தைகள் தின விழா

பண்ருட்டி, நவ. 21:
சி.என்.பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியை வி.மல்லிகா தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத் தலைவர் என்.வைத்திலிங்கம், 9, 10-ம் வகுப்பு மாணவர்கள் 125 பேருக்கு ஆங்கில அகராதி வழங்கி சிறப்புரை வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் எஸ்.நடராஜன் பங்கேற்றார். ஆசிரியர் டி.செல்வக்குமார் நன்றி கூறினார்.ஸ்வாசிகா மாணவர் இயக்கம்: ஸ்வாசிகா மாணவர் இயக்கம் சார்பில் குழந்தைகள் தின விழா புதுப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் கொண்டாடப்பட்டது.தொரப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். ஸ்வாசிகா நிறுவனர் ஏ.முத்துக்குமரன் வரவேற்றார். விழாவில் மாணவர்களிடையே ஓவியப்போட்டி, மாறு வேடப்போட்டி மற்றும் கொழு கொழு குழந்தைகள் போட்டி நடத்தப்பட்டு பரிசு அளிக்கப்பட்டது. விழாவில் ஆசிரியர் வ.கோவிந்தனுக்கு ஆன்மிக இலக்கிய எழுத்துச் சித்தர் பட்டமும், கல்வெட்டு ஆய்வாளர் அரங்க. தமிழரசனுக்கு தொல்பொருள் ஆராய்ச்சி திலகம் என்ற பட்டமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior