உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 23, 2009

சொத்து பத்திர பாக்கி: ஆட்சியர் புது உத்தரவு

கட ​லூர்,​ நவ. 22:​

கட​லூர்,​ விழுப்​பு​ரம் மாவட்​டங்​க​ளில் உள்ள சார் பதி​வா​ளர் அலு​வ​ல​கங்​க​ளில் பதிவு செய்​யப்​பட்ட சொத்​துப் பத்​தி​ரங்​க​ளுக்​கா​னப் பாக்​கித் தொகையை செலுத்தி,​ பத்​தி​ரங்​க​ளைப் பெற்​றுக் கொள்​ள​லாம் என்று கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் சனிக்​கி​ழமை அறி​வித்​தார்.​ ​ அவர் வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு: ​​ ​

கட​லூர் மற்​றும் விழுப்​பு​ரம் மாவட்​டங்​க​ளில் உள்ள கட​லூர்,​ சிதம்​ப​ரம்,​ விருத்​தா​ச​லம்,​ கள்​ளக்​கு​றிச்சி,​ விழுப்​பு​ரம்,​ திண்​டி​வ​னம் ஆகிய சார் பதி​வா​ளர் அலு​வ​ல​கங்​க​ளில் குறைவு முத்​தி​ரைச் சட்ட வரு​வாய் திட்​டத்​தின் கீழ் அர​சுக்கு செலுத்​தப்​ப​டா​மல் நிலு​வை​யில் உள்ள பாக்​கி​தா​ரர் விவ​ரப்​பட்​டி​யல் தயார் செய்​யப்​பட்டு உள்​ளது,​ இந்த விவ​ரங்​கள் தேசிய தக​வல் மைய இணைய தளத்​தில் கட​லூர்,​ விழுப்​பு​ரம் மாவட்​டங்​க​ளுக்​கான பகு​தி​யில் வெளி​யி​டப்​பட்டு உள்​ளது. ​​ சம்​பந்​தப்​பட்ட பாக்​கி​தா​ரர்​கள்,​ இந்த சேவை​யைப் பயன்​ப​டுத்தி,​ தங்​கள் சொத்​துக்​குச் செலுத்த வேண்​டிய குறைவு முத்​தி​ரைக் கட்​ட​ணத் தொகையை தெரிந்து கொண்டு,​ 30-ம் தேதிக்​குள் பாக்​கித் தொகையை செலுத்தி தங்​கள் பத்​தி​ரங்​க​ளைப் பெற்​றுக் கொள்​ள​லாம்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior