உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 23, 2009

ரூ.60 லட்சத்தில் புதுப்​பிக்கும் பணி தொடக்​கம்

சிதம் ​ப​ரம்,​ நவ. 22:​
கட​லூர் மாவட்​டம் காட்​டு​மன்​னார்​கோ​வில் அருகே கீழக்​க​டம்​பூ​ரில் உள்ள ருத்ர கோடீஸ்​வ​ரர் கோயில் சிதைந்த நிலை​யில் உள்​ளது. 9-ம் நூற்​றாண்​டில் கட்​டப்​பட்ட பழமை வாய்ந்த இந்த கோயிலை மத்​திய அர​சின் தொல்​லி​யல்​துறை ஆய்வு செய்து ரூ.60 லட்​சம் செல​வில் ஆல​யத்தை புதுப்​பிக்​கும் பணி தொடங்​கப்​பட்​டுள்​ளது.​ ​ ஆலய புதுப்​பிக்​கும் பணியை கனி​மொழி எம்.பி., பள்​ளிக்​கல்​வித்​துறை அமைச்​சர் தங்​கம் தென்​ன​ரசு ஆகி​யோர் சனிக்​கி​ழமை பார்​வை​யிட்​ட​னர்.​ ​ இந்த ஆல​யம் குறித்து தொல்​லி​யல்​துறை கல்​வெட்டு ஆராய்ச்​சி​யா​ளர் சீனு​வா​சன் தெரி​வித்​தது:​ இந்த கோயில் 9-ம் நூற்​றாண்​டில் கட்​டப்​பட்ட பழமை வாய்ந்த ஆல​ய​மா​கும். இந்த கோயி​லில் தெற்கு வடக்​காக 4 அடி அக​லத்​துக்கு படி​க​ளு​டன் அமைந்​துள்ள சுரங்​கம் ஒன்று உள்​ளது. இச்​சு​ரங்​கத்​தின் மூலம் அரு​கில் உள்ள மேலக்​க​டம்​பூர் அமிர்​த​க​டேஸ்​வ​ரர் ஆலய பணிக்கு தொழி​லா​ளர்​கள் சென்​றி​ருக்​க​லாம் எனக்​கூ​றப்​ப​டு​கி​றது. ஆல​யத்தை சுற்றி சைவம் வளர்த்த பெரி​யோர்​க​ளின் 10க்கும் மேற்​பட்ட சிலை​கள் உள்​ளன. கரு​வ​றை​யின் பின் சூரி​யன் சிலை வடி​வில் காட்​சி​ய​ளிக்​கி​றார். மேலக்​க​டம்​பூர் அமிர்​த​க​டேஸ்​வர் ஆல​யத்​துக்​கான சிலை​கள் இங்கு செய்​யப்​பட்​டுள்​ளன. சிலை​க​ளைச் செய்​யும் போது அனைத்து சிலை​க​ளும் உடைந்​த​துள்​ளது. அந்த சிலை​கள் வெளிப் பிர​கா​ரத்​தில் தற்​போ​தும் உள்​ளன. திரு​ம​ணம் ஆகா​த​வர்​கள் இந்த கோயி​லுக்​குச் சென்று வழி​பட்​டால் திரு​ம​ணம் நடை​பெ​றும் என்​பது ஆல​யத்​தின் ஐதீ​க​மா​கும். மேலக்​க​டம்​பூர் அமிர்​த​க​டேஸ்​வ​ரர் ஆல​யம் கட்​டு​வ​தற்கு வந்த சிற்​பி​கள் மற்​றும் தொழி​லா​ளர்​கள் வழி​ப​டு​வ​தற்​காக இந்த ஆல​யம் நிறு​வப்​பட்​டி​ருக்​க​லாம் என ஆராய்ச்​சி​யா​ளர் சீனு​வா​சன் தெரி​வித்​தார்.​ ​ சிறப்​பு​வாய்ந்த இந்த ஆல​யம் சித​ல​ம​டைந்​துள்​ள​தால் தனி​யார் ஒப்​பந்​தக்​கா​ரர்​கள் மூலம் தொல்​லி​யல்​துறை ​ ரூ.60 லட்​சம் செல​வில் புதுப்​பிக்​கும் பணியை தொடங்​கி​யுள்​ளது. இந்த சீர​மைப்பு பணி முடி​வுற 6 மாதங்​கள் ஆகும் எனக் கூறப்​ப​டு​கி​றது. ஆல​யத்​தின் அடித்​த​ளம் வரை அப்​பு​றப்​ப​டுத்​தப்​பட்டு மீண்​டும் அதே இடத்​தில் தொல்​லி​யல் துறை​யால் வழங்​கப்​பட்​டுள்ள மாதிரி வரை​ப​டத்​தைக் கொண்டு புதிய ஆல​யம் கட்​டப்​பட உள்​ளது என ஊராட்சி மன்​றத் தலை​வர் ஜோதி தெரி​வித்​தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior