உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 23, 2009

கடற்​கரை கிரா​மங்​க​ளில் வசிப்​ப​வர்​க​ளுக்கு அடை​யாள அட்டை

சிதம்​ப​ரம்,​ நவ. 21:​

கடற்​கரை கிரா​மங்​க​ளில் வசிப்​ப​வர்​க​ளுக்கு அடை​யாள அட்டை வழங்​கு​வ​தற்​காக சிதம்​ப​ரம் அருகே உள்ள கடற்​கரை கிரா​மங்​க​ளில் நவம்​பர் 20-ம் தேதி தொடங்கி டிசம்​பர் 30-ம் தேதி வரை புகைப்​ப​டம் எடுக்​கும் பணி நடை​பெ​று​கி​றது. எனவே அப்​ப​குதி மக்​கள் ஏற்​கெ​னவே கணக்​கெ​டுப்பு முடி​வுற்று அதற்​காக வழங்​கப்​பட்ட ஒப்​பு​தல் ரசீதை புகைப்​ப​டம் எடுக்​கும் மையத்​துக்கு எடுத்​துச் சென்று தங்​க​ளது கைரே​கையை பதிவு செய்து புகைப்​ப​டம் எடுத்​துக் கொள்ள வேண்​டும் என வட்​டாட்​சி​யர் கோ.தன்​வந்​த​கி​ருஷ்​ணன் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.​ ​ கடற்​கரை பாது​காப்பை பலப்​ப​டுத்​தும் ஒர் அங்​க​மாக கடற்​கரை கிரா​மங்​க​ளில் முதல் கட்​ட​மாக தேசிய மக்​கள் தொகை பதி​வேட்டை தயா​ரிக்க இந்​திய அரசு தீர்​மா​னித்​துள்​ளது. அதில் ஒவ்​வொரு தனி நப​ரைப் பற்​றிய புள்ளி விப​ரங்​கள்,​ 15 வயது,​ அதற்கு மேற்​பட்ட வய​து​டைய நபர்​க​ளி​டம் புகைப்​ப​டம்,​ கைரேகை சேக​ரிக்​கப்​பட்டு அடை​யாள அட்டை வழங்​கும் பணி மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது என வட்​டாட்​சி​யர் கோ.தன்​வந்​த​கி​ருஷ்​ணன் தெரி​வித்​துள்​ளார்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior