உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 23, 2009

நட​ரா​ஜர் கோயி​லில் வழி​பட்​டார் ராசாத்தி அம்​மாள்

சிதம் ​ப​ரம்,​ நவ. 22:​

தமி​ழக முதல்​வ​ரின் துணை​வி​யார் ராசாத்தி அம்​மாள் மற்​றும் கனி​மொழி எம்பி மக​னும்,​ முதல்​வ​ரின் பேர​னு​மான ஆதித்​யன் ஆகி​யோர் சிதம்​ப​ரம் நட​ரா​ஜர் கோயி​லில் ஞாயிற்​றுக்​கி​ழமை வழி​பட்​ட​னர்.​ ​ ஆலய செயல்​அ​லு​வ​லர் கே.சிவக்​கு​மார்,​ திமுக நக​ரச் செய​லா​ளர் கே.ஆர்.செந்​தில்​கு​மார்,​ பொதுக்​குழு உறுப்​பி​னர் ஏ.எஸ்.திரு​நா​வுக்​க​ரசு,​ இளை​ஞ​ரணி துணை அமைப்​பா​ளர் ஜேம்ஸ்​வி​ஜ​ய​ரா​க​வன்,​ நகர மாண​வ​ரணி அமைப்​பா​ளர் அப்​பு​சந்​தி​ர​சே​க​ரன்,​ பரங்​கிப்​பேட்டை ஒன்​றி​யச் செய​லா​ளர் முத்​து​பெ​ரு​மாள் ஆகி​யோர் சால்வை கொடுத்து வர​வேற்று கோயி​லுக்​குள் அழைத்​துச் சென்​ற​னர்.​ ​ பின்​னர் ராசாத்தி அம்​மாள்,​ ஆதித்​யன் ஆகி​யோர் கோயி​லுக்​குள் சென்று சிற்​றம்​ப​ல​மேடை மீது ஏறி சாமி தரி​ச​னம் செய்​த​னர். அவர்​க​ளுக்கு ஆலய பொது தீட்​சி​தர்​கள் சிறப்பு அர்ச்​சனை மற்​றும் ஆரா​தனை செய்து பிர​சா​தத்தை வழங்​கி​னர். ​ பின்​னர் ஆலய வளா​கத்​தில் உள்ள தில்​லை​கோ​விந்​த​ரா​ஜப் பெரு​மாள் ஆல​யம்,​ சர​பேஸ்​வ​ரர் சன்​னதி,​ ஊர்த்​து​வ​தாண்​ட​வர் சன்​னதி,​ ஆதி​மூ​ல​நா​தர் சன்​னதி,​ சிவ​கா​மி​அம்​மன் ஆல​யம் ஆகி​ய​வற்​றுக்​கும் சென்று தரி​ச​னம் செய்​த​னர். முன்​ன​தாக நக​ரின் எல்​லை​யில் உள்ள தில்​லைக்​கா​ளி​யம்​மன் கோயி​லுக்​கும் சென்று சாமி தரி​ச​னம் செய்​த​னர். பின்​னர் வட​லூ​ரில் நடை​பெற்று வரும் வேலை​வாய்ப்பு முகா​முக்கு புறப்​பட்​டுச் சென்​ற​னர்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior