உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 23, 2009

ஊரை​விட்டு ஒதுக்கி வைக்​கப்​பட்​ட​வர் பிரச்னை வட்டாட்​சி​யர் தலை​மை​யில் அமை​திக் கூட்​டம்

சிதம்​ப​ரம்,​ நவ.22:

சிதம்​ப​ரம் அருகே தலித் சமு​தா​யத்​தைச் சேர்ந்த விரி​வு​ரை​யா​ளர் குடும்​பம் ​ ஊரை​விட்டு ஒதுக்கி வைக்​கப்​பட்​டுள்​ள​தாக வந்த புகா​ரின் பேரில் சிதம்​ப​ரம் வட்​டாட்​சி​யர் அலு​வ​ல​கத்​தில் சனிக்​கி​ழமை பஞ்​சா​யத்​தார் முன்​னி​லை​யில் அமை​திக் கூட்​டம் நடை​பெற்​றது.​ ​ சிதம்​ப​ரத்தை அடுத்த கொடிப்​பள்​ளம் கிரா​மத்​தைச் சேர்ந்​த​வர் த.சர​வ​ணக்​கு​மார். தலித் சமு​தா​யத்​தைச் சேர்ந்த இவர் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக் கழ​கத்​தில் பொரு​ளா​தா​ரத் துறை​யில் விரி​வு​ரை​யா​ள​ராக உள்​ளார். ​ இவர் கொடிப்​பள்​ளம் அருகே உள்ள பின்​னத்​தூர் மேற்கு கிரா​மத்​தைச் சேர்ந்த ஒளி​மு​க​மது என்​ப​வ​ருக்​குச் சொந்​த​மான நிலத்தை 2005-ம் ஆண்டு முதல் குத்​த​கைக்கு எடுத்து பயி​ரிட்டு வந்​துள்​ளார். அந்த நிலத்தை ஆதி​தி​ரா​வி​டர்​க​ளுக்கு பட்டா வழங்​கு​வ​தற்​காக ஆதி​தி​ரா​விட நலத்​துறை மூலம் கிரா​மப் பஞ்​சா​யத்​தார் நட​வ​டிக்கை மேற்​கொண்​ட​னர். இத​னி​டையே ஒளி​மு​க​மது நிலத்தை விற்​பனை செய்ய முன்​வந்த போது அந்த நிலத்தை சர​வ​ணக்​கு​மார் வாங்​கி​யுள்​ளார். இந்​நி​லை​யில் அக்​கி​ரா​மத்​தைச் சேர்ந்த சிலர் ஊர் மக்​க​ளுக்கு வீட்டு மனைப்​பட்டா வழங்க வேண்​டும் என்​ப​தற்​காக அந்த நிலத்​தைத் தரு​மாறு கேட்​ட​னர். அதற்கு சர​வ​ணக்​கு​மார் மறுத்​த​தால் கிராம பஞ்​சா​யத்​துக்கு அழைத்து இந்த நிலத்தை ஊருக்​காக விட்​டுக் கொடுக்க வேண்​டும் எனக்​கோ​ரி​னர். அதற்​கும் சர​வ​ணக்​கு​மார் மறுத்​த​த​தா​கக் கூறப்​ப​டு​கி​றது.​ இது குறித்து சர​வ​ணக் குமார் காவல் நிலை​யத்​தில் புகார் கொடுத்​துள்​ளார். அதில்அவர் தெரி​வித்​துள்​ள​தா​வது:​ "17-11-09ல் ஊர்​பஞ்​சா​யத்​தைக் கூட்டி அந்த நிலத்​தில் நான் பயி​ரி​டக்​கூ​டாது,​ எனது வீட்​டுக்கு யாரும் செல்​லக்​கூ​டாது,​ எனக்கு கடை​க​ளில் மளிகை சாமான் கொடுக்​கக்​கூ​டாது,​ என்​னு​டன் யாரும் உறவு வைத்​துக் கொள்​ளக்​கூ​டாது என்று தெரி​வித்​த​தோடு மீறி தொடர்பு கொண்​டால் ரூ.5 ஆயி​ரம் அப​ரா​தம் போட்​டுள்​ள​னர். இத​னால் தனி​ம​னித உரிமை பாதிக்​கப்​பட்டு நான் மிகுந்த மன உளச்​ச​லுக்கு ஆளா​கி​யுள்​ளேன்' என்று ​ கிள்ளை காவல் நிலை​யத்​தில் வியா​ழக்​கி​ழமை புகார் அளித்​துள்​ளார். கிள்ளை போலீ​ஸôர் புகா​ரைப் பதிந்து விசா​ரணை மேற்​கொண்​டுள்​ள​னர்.​ ​ மேலும் இது​கு​றித்து சென்னை மனித உரிமை ஆணை​யம்,​ கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர்,​ ஆதி​தி​ரா​விட நலத்​துறை செய​லா​ளர் ஆகி​யோ​ருக்கு கடி​தம் அனுப்​பி​யுள்​ள​தாக சர​வ​ணக்​கு​மார் தெரி​வித்​துள்​ளார்.​ இந்​நி​லை​யில் சிதம்​ப​ரம் வட்​டாட்​சி​யர் அலு​வ​ல​கத்​தில் வட்​டாட்​சி​யர் கோ.தன்​வந்​த​கி​ருஷ்​ணன் தலை​மை​யில் அமை​திக் கூட்​டம் சனிக்​கி​ழமை நடந்​தது. கூட்​டத்​தில் கிராம பஞ்​சா​யத்​தார் மற்​றும் சர​வ​ணக்​கு​மார்,​ கிள்ளை சப்-​இன்ஸ்​பெக்​டர் அஸ்​கர்அலி உள்​ளிட்​டோர் பங்​கேற்​ற​னர். கட​லூர் மாவட்ட ஆதி​தி​ரா​வி​டர் நலத்​துறை மூலம் வீட்​டு​ம​னைப்​பட்டா வழங்க சர​வ​ணக்​கு​மார் வாங்​கி​யுள்ள நிலம் தேர்​வு​செய்ப்​பட்டு அரசு பரிந்​து​ரைக்கு சென்​றுள்​ளது. நில​ஆர்​ஜி​தம் செய்ய அர​சாணை வரும் வரை சர​வ​ணக்​கு​மார் நிலத்​தில் பயி​ரி​டு​வதை யாரும் தடுக்​கக்​கூ​டாது. அப்​படி தடுத்​தால் தடுப்​ப​வர்​கள் மீது கிரி​மி​னல் நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும். மேலும் நில​ஆர்​ஜி​தம் செய்​வ​தற்​கான முயற்​சி​களை ஆதி​தி​ரா​வி​டர் நலத்​துறை மூலம் விரைந்து முடிப்​பது என தீர்​மா​னிக்​கப்​பட்​டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior