உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 24, 2009

வயலில் மேய்ந்த 25 மாடுகளை கசாப்பு கடைக்கு விற்ற மூவருக்கு வலை

உளுந்தூர்பேட்டை :

                      விருத்தாசலம்  அருகே வயலில் மேய்ந்த மாடுகளை கசாப்பு கடைக்கு  அனுப்பிய கொடூரம் அரங்கேறியதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மேற்கிருப்பு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் இளை யபெருமாள், ராமச்சந்திரன், துரைசாமி. இவர்களின் மாடுகள் அடிக்கடி காணாமல் போனதால் பல கசாப்பு கடைகளுக்கு சென்று பார்த்து வந்தனர்.இந்நிலையில் நேற்று காலை உளுந்தூர்பேட்டை  அடுத்த எம்.எஸ்.தக்கா அப்துல்லா, சதாம்கானுக்கு சொந்தமான கசாப்பு கடை கொட்டகையில் தங்கள் மாடுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த இளையபெருமாள் உளுந் தூர்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.

                 போலீசார் நடத்திய விசாரணையில் மணக் கொல்லையிலுள்ள சுரேஷ், நடராஜ், ரமேஷ் ஆகியோரின் நிலத்தில் மாடுகள் மேய்ந்ததால் ஆத்திரத்தில் கசாப்புக்கடைக்கு அடிக் கடி மாடுகளை ஏற்றி அனுப்பியது தெரிந்தது.  கசாப்பு கடையில் இருந்த 6 மாடுகளை மீட்டு போலீசார் ஸ்டேஷனில் கட்டி வைத்தனர். 25 மாடுகளை கசாப்பு கடைக்கு அனுப்பிய சுரேஷ், நடராஜ், ரமேஷை தேடிவருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior