உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 24, 2009

காற்றில் மரம் விழுந்ததால் இறையூரில் மின்சாரம் 'கட்'

திட்டக்குடி :

                  திட்டக்குடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு வீசிய பலத்த காற்றில் மரம் ஒன்று மின் கம்பத் தில் விழுந்ததில் இறையூர் கிராமத்தில் 14 மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப் பட்டது.திட்டக்குடி  பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் திடீரென பலத்த காற்று வீசியது. அதில் இறையூர் கைகாட்டி பஸ் நிறுத்தம் அருகே-திட்டக்குடி-விருத்தாசலம் சாலையோரம் இருந்த அத்தி மரம் அருகில் உள்ள மின் கம்பத்தின் மீது விழுந்தது. மரத்திற்கு அருகிலிருந்த கிருஷ்ணமூர்த்தி, முத்துவேல் ஆகியோரது கூரை வீடுகள் சேதமடைந்தன.

                  மேலும் சாலையோரம் சென்ற மின்கம்பம் முறிந்து சுமார் 300 மீட்டருக்கு மின்கம்பிகள் அறுந்தன.தகவலறிந்த பெண்ணாடம் துணைமின் நிலைய உதவி பொறியாளர் பன்னீர் உத்தரவின்படி, இரவு முழுவதும் மின் சப்ளை துண்டிக்கப்பட்டு, நேற்று காலை முதல் மின்ஊழியர்கள் மரக்கிளைகளை அகற்றி மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மதியம் 1 மணிக்கு மேல் இறையூர் மெயின்ரோடு பகுதிகளுக்கு மின்சப்ளை வழங்கப்பட்டது. காற்றில் மரம் சாய்ந்து மின்கம்பிகள் அறுந்த சம்பவத்தால் இறையூர் மெயின்ரோட் டில் சுமார் 14 மணி நேரம் மின்சாரம் இல்லாததால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior