உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 24, 2009

பள்ளிகளில் செயல் வழிக்கற்றல் ஸ்ரீமுஷ்ணத்தில் அதிகாரிகள் ஆய்வு

ஸ்ரீமுஷ்ணம் :

                         ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள பள்ளிகளில்  செயல் வழிக்கற்றல் செயல் பாடு கள் குறித்து பள்ளிகளில்  மத்திய, மாநில அதிகாரி கள் ஆய்வு செய்தனர்.இதில் மத்திய மனித வள  மேம்பாட்டுத்துறை இணைச் செயலாளர் கவுதம், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் உதவி திட்ட அலுவலர் செல்வம், கடலூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் விஜயா ஆகியோர் ஸ்ரீமுஷ் ணத்தை அடுத்த ஸ்ரீராமன் காலனி, கீழ்புளியங்குடி, நாச்சியார்பேட்டை காலனி  துவக்கப் பள்ளி கள் மற்றும் சாத்தாவட்டத் தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி களில்  அனைத்து பாடங் களிலும் செயல்வழிக் கற்றலில் மாணவர்களின் செயல்பாடுகள் குறித்தும், மாணவர்கள் திறன் அட் டைகளை பயன்படுத் துவது குறித்தும் ஆய்வு செய்தனர்.இதில் மாவட்ட தகவல் அலுவலர் வைத்தியநாதன், காட்டுமன்னார்கோவில் வட்டார வள மேற்பார்வையாளர் காமராஜ், காட்டுமன்னார்கோவில் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் பச்சையப்பன், சரஸ்வதி, லட் சுமி, ஆசிரியபயிற்றுநர் பரமசிவம் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior