உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 24, 2009

இந்தியாவில் நீரிழிவு நோயாளிகள் அதிகரிப்புசிறுநீரகவியல் : துறை தலைவர்தகவல்

நெய்வேலி :

                    நோய்கள் குறித்த விழிப் புணர்வு ஏற்படுத்தினால், மனித உயிர்கள் காப்பாற் றப்படும் என என்.எல்.சி., இயக்குனர் கந்தசாமி பேசினார்.இந்திய பொறியாளர் கழகத்தின் நெய்வேலி மையம் சார்பில் சிறுநீரக நோய்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய என்.எல்.சி., திட் டம் மற்றும் செயலாக்க துறை இயக்குனர் கந்தசாமி பேசியதாவது :

                 என்.எல்.சி., பணியா ளர்களில் சிலர் நோய் குறித்த விழிப்புணர்வு இல் லாமல் நோய் தீவிரமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு செல்கின்றனர். இதில் சிலர் துரதிஷ்டவசமாக இறக்கின்றனர். மக்களிடையே நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால், மனித உயிர்கள் காப்பாற்றப்படும் என்றார்.


நிகழ்ச்சியில் செங்கல் பட்டு அரசு மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறை தலைவர் டாக் டர் எட்வின் பெர் னான்டோ பேசியதாவது :

                       நமது நாட்டில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இருதய நோய், சிறுநீரக நோய் போன்ற பிறரிடமிருந்து பரவாத நோய்கள் தற்போது அதிகரித்து வருகிறது. குறிப்பாக நமது நாட்டில் தான் நீரிழிவு நோயாளிகள் அதிக அள வில் உள்ளனர். வரும் 2015ம் ஆண்டில் நமது நாட் டில் மட்டும் நீரிழிவு நோயாளிகளின் எண் ணிக்கை 7 கோடியை தாண் டும் என எதிர்பார்க்கப்படுகிறது.வளரும் நாடுகளுக்கு சிறுநீரக நோய் பெரிய பிரச்னையாக உள்ளது. இந்நோயை தொடக்க நிலையில் கண்டறிந்து மருத்துவரிடம் செல்லும் அளவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டால் மக்களுக்கும், அரசுக்கும் நல்லது.சோடியம் அதிகம் உள்ள உப்பு, பாலாடைக் கட்டி, ஊறுகாய், வத்தல், வடகம் ஆகிய உணவுகளையும், பொட்டாசியம் அதிகம் உள்ள வாழைப்பழம், ஆரஞ்ச், இளநீர், சாக்லெட்டுகள் மற்றும் டின்களில் அடைக்கப் பட்டு வரும் பொருட் களை தவிர்த்தால் சிறுநீரக பாதிப்பு ஏற்படாது என்று பேசினார். இந்திய பொறியாளர் கழகத்தின் நெய் வேலி மைய செயலாளர் சக்ரவர்த்தி, ராமச்சந்திரன், கென்னடி கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior