உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 24, 2009

ஒரு நபர் குழு அறிக்கை வெளியிடக் கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கடலூர் :

                    ஒரு நபர் குழு அறிக் கையை வெளியிடக் கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் சார்பில் தாலுகா அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.கடலூர் தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப் பாட்டத்திற்கு வட்ட துணைத் தலைவர் பொற் செழியன தலைமை தாங்கினார். செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். வட்ட தலைவர் காசிநாதன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாவட்ட இணை செயலாளர்கள் கல்யாணசுந்தரம், அய்யாசாமி, வட்ட இணை செயலாளர் தர்மலிங்கம் உட் பட பலர் கலந்து கொண்டனர்.

                  திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அண்ணாதுரை, மோகன் ராஜ், சாலைப்பணியாளர் சங்க ஒன்றிய தலைவர் கலைவாணன், சந்திரா, வட்ட செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் பேசினர்.பண்ருட்டி தாலுகா அலுவலகம் முன் வட்ட தலைவர் அரிகிருஷ்ணன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட் டத்தில் வருவாய் துறை வட்ட தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட துணை தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பேசினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior