உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 20, 2010

எஸ்.ஐ., உள்ளிட்ட மூவருக்கு தலா 10 ஆண்டு சிறை பெண் தற்கொலை வழக்கில் தீர்ப்பு


கடலூர் : 

                  வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் உள்ளிட்ட மூன்று பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா 1.55 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கடலூர் மகளிர் கோர்ட் தீர்ப்பளித்தது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஆணிக்காரன் தெருவைச் சேர்ந்தவர் மோட்சகுரு(60). ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ் பெக்டர். இவரது மனைவி சந்திரா(52). இவர்களின் மகன் குமார்(29). சென்னை  ரயில்வே போலீசில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர்.குமாருக்கும், சிதம்பரம் அடுத்த மீதிக்குடி கிராமம் வீரபாண்டியன் மகள் வசந்தபிரியா (24)விற்கும் திருமணம் டந்தது. வசந்தபிரியாவின் பெற்றோர் வரதட்சணையாக 25 சவரன் நகை,  ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமாக கொடுத்தனர்.இந்நிலையில் கணவர் குமார், மாமனார் மோட்சகுரு, மாமியார் சந்திரா மூவரும் வரதட்சணை கேட்டு  வசந்தபிரியாவை துன்புறுத்தி வந்தனர்.கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி வசந்தபிரியா தனது பெற்றோருக்கு போனில் தகவல் கூறினார்.

                                      அதன்பேரில் வீரபாண்டியன், குமார் வீட்டிற்கு வந்து, சம்பவம் குறித்து விசாரித்தார். அப்போது குமார் வீட்டில் இல்லை என்பதால் பிறகு வந்து விசாரிப்பதாக கூறிவிட்டு வீரபாண்டியன் தனது வீட்டிற்கு சென்றுவிட்டார். சற்று நேரத்தில் வசந்தபிரியா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். வரதட்சணை கொடுமையினால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக வீரபாண்டியன் போலீசில் புகார் செய்தார்.  சிதம்பரம் டவுன் போலீசார்  குமார், மோட்சகுரு, சந்திரா ஆகியோரை கைது செய்தனர். வழக்கை விசாரித்த கடலூர் மகளிர் கோர்ட் நீதிபதி அசோகன், வசந்தபிரியாவை தற்கொலைக்கு தூண்டிய அவரது கணவர் குமார், மாமனார் மோட்சகுரு, மாமியார் சந்திரா ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா 1.55 லட்சம் அபராதமும் விதித்து நேற்று  தீர்ப்பளித்தார். மேலும் அபராதத்தொகையில் 4 லட்சம் ரூபாயை, இறந்த வசந்தபிரியாவின் தந்தை வீரபாண்டியனுக்கு இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு வக்கீல் சிவராஜ் ஆஜரானார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior