உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 20, 2010

வைத்தியநாதசுவாமி கோவிலில் 208 சித்தர்களின் சிறப்பு யாக பூஜை

திட்டக்குடி : 

                          திட்டக்குடியில் வைத்தியநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக பணிகள் துரிதமாக நடைபெறவும், உலக நன்மை வேண்டியும் 208 சித்தர்களின் சிறப்பு யாகபூஜை இன்று நடக்கிறது. திட்டக்குடி அசனாம்பிகை அம்மன் உடனுறை வைத்தியநாத சுவாமி கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் விரைவில் நடைபெற வேண்டியும், திருக்குளம் சீரமைவும், இயற்கை வளம், மனித நேயம், மத நல்லிணக்கம், மாணவர்களின் கல்வி நலன், மழை, வியாபார அபிவிருத்தி வேண்டி 208 கலச பூஜை, கோ பூஜை, 108 சங்காபிஷேகம், 208 சித்தர்களின் சிறப்பு யாக பூஜை இன்று (20ம் தேதி) நடக்கிறது. கலெக்டர் சீத்தாராமன் தலைமையில், விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி., மாசானமுத்து, இணை ஆணையர்கள் தங்கராஜி, ஜெகநாதன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் சடையப்பன், சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் நடக்கிறது.
                            பெரம்பலூர் சித்தர் ராஜ்குமார் குருஜி யாகபூஜையை துவக்கி வைக்கிறார்.தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானத்தை சிவகாமசுந்தரி மாசானமுத்து வழங்குகிறார். தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி தாளாளர் கிருஷ்ணசுவாமி தலைமையில் பூர்ணாஹூதி நடைபெறுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior