உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 20, 2010

தனியார் பஸ்களில் கட்டண உயர்வு வாபஸ்

சிதம்பரம் : 

                                 கடலூர் மாவட்ட தனியார் பஸ்களில் 50 பைசா கட்டண உயர்வு, மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கையால் நேற்று திடீரென வாபஸ் பெறப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் தனியார் பஸ்களில் திடீரென 15 நாட்களாக 50 பைசா சொச்சமாக இருந்த பஸ் கட்டணம் "ரவுண்டு' செய்யப்பட்டு குறைந்த கட்டணம் 3.50ல் இருந்து 4 ஆக உயர்ந்தது. அதே போன்று 4.50, 6.50, 8.50 என இருந்த கட்டணம் 50 பைசா உயர்த்தப்பட்டது. பஸ்சில் 50 பைசா சில்லரை பாக்கி கொடுக்கும் பிரச்னையில் பயணிகளுக்கும் பஸ் ஊழியர்களுக்கும் ஏற்பட்டு வந்த பிரச்னையை தவிர்க்க இந்த கட்டண உயர்வு என கூறப்பட்டது. ஆனால் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகுதான் பஸ்களில் அதிக அளவில் பிரச்னை ஏற்பட்டு வந்தது. அறிவிக்கப்படாத கட்டண உயர்வால் பள்ளி மாணவ, மாணவிகள், ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டனர்.இந்த 50 பைசா கட்டண உயர்வை முன்னோட்டமாக வைத்து, பயணிகளின் நிலையை அறிந்து அனைத்து கட்டணத்தையும் கணிசமாக உயர்த்த திட்டமிட்டிருந்தமாகவும் கூறப்பட்டது.

                                 இந்நிலையில் 50 பைசா கட்டண உயர்வால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், கலெக்டர் வரை புகார் செய்ய, மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. கலெக்டர் நேற்று நேரிடையாக சோதனை நடத்த ஆயத்தமாகியதாக கூறப்படுகிறது.  இதை அறிந்த பஸ் உரிமையாளர்கள் உஷாராகினர். உடனடியாக பஸ்  கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும், பஸ் கட்டணம் உயர்த்தியதற்கான தடயங்கள் ஏதும் சிக்கி விடாதபடி டிரிப் ஷீட், டிக்கெட் புக் மாற்றவும், டிக்கெட் இயந்திரத்தில் கட்டணத்தை மாற்றி அமைக்க பஸ் உரிமையாளர்கள் தங்களது ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து அனைத்து தனியார் பஸ்களிலும் நேற்று காலை 11 மணிக்கு அதிரடியாக கட்டணம் குறைக்கப்பட்டது.  அதிரடி கட்டண குறைவு மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கைக்கு முன்பே குறைக்கப்பட்டதால் பயணிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior