உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 20, 2010

வெள்ளத்தடுப்பு பணிக்கு ரூ.470 கோடி குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் தகவல்

கடலூர் : 

                                 மாவட்டத்தில் உள்ள குளம், வாய்க் கால், ஏரிகளில் 470 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மராமத்து மற்றும் வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மன்ற கூடத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., நடராஜன், திட்ட அலுவலர் ராஜஸ்ரீ, வேளாண் இணை இயக்குனர் இளங்கோவன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம்:
 

மா. கம்யூ., ரவீந்திரன் பேசுகையில் "ஒரு  லட்சம் உண்மையான ரேஷன் கார்டுதாரர்களை நீக்கம் செய்து விட்டு மேல் முறையீடு என்ற பெயரில் அலைகழிக்கப்படுகின்றனர். மாவட்டத்தில் வெள்ளத் தடுப்பு பணிகளை துவங்க வேண்டும்.' 

விவசாயி ரவீந்திரன் பேசுகையில் "மழை வெள்ள காலங்களில் பாசிமுத்தான் ஓடையிலிருந்து வெளியேறும் தண்ணீரால் வெள்ள காலங்களில் சிதம்பரம் நகரம் மூழ்குகிறது. இதனை தடுக்க நடவடிக்கை மேற்கெள்ள வேண்டும்.' 

 ராமானுஜம் பேசுகையில் "வாலாஜா ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி  ஆழப்படுத்த வேண்டும்' எனவும் 

வீரபாண்டி பேசுகையில் "விருத்தாசலத்தில் பாலம் கட்டுவதால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் போக்குவரத்தை மாற்றி அமைக்க வேண்டும்.' 

வேங்கடபதி பேசுகையில் "சொட்டு நீர் பாசனத்திற்காக அரசு 65 சதவீதம் மானியம் தருகிறது. 1 ஹெக்டேருக்கு 90 ஆயிரம் ரூபாய் செலவானால் 37 ஆயிரத்து 500 ரூபாய்தான் மானியம் கிடைக்கிறது.
 
கலெக்டர் பேசுகையில் "470 கோடி ரூபாயில் குளம், வாய்க்கால், ஏரிகளில் மராமத்து மற்றும் வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior