உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 20, 2010

அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் 119 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

சிதம்பரம் : 

                        சென்னையில் நடைபெறவுள்ள அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் 119 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்படும் என முன்னாள் எம்.பி., வள்ளல்பெருமான் தெரிவித்தார

திருக்குலம் சிந்தனையாளர் மைய நிறுவனரும் முன்னாள் எம்.பி., யுமான வள்ளல்பெருமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

                    திருக்குலம் சிந்தனையாளர் மையம் சார்பில் அம் பேத்கரின் 119வது பிறந்த தின விழா வரும் ஏப். 18ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடக்கிறது.

                    மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் நடைபெறும் விழாவில் மத்திய தொழிலாளர் நலம் மற்றும் வேலை வாய்ப்பு துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, மத்திய சமூக நலத்துறை அமைச்சர் முகுல் வாஸ்னிக், மத்திய வெளிநாட்டு வேலை வாய்ப்பு துறை அமைச்சர் வயலார் ரவி மற்றும் தமிழ்நாடு காங்., தலைவர், எம்.பி. எம்.எல்.ஏ.,க் கள், அரசு அதிகாரிகள், தலித் அரசியல் இயக்க தலைவர்கள் பங்கேற்கின்றனர். விழாவில் "சமூக நீதியும்- தலித் மக்களின் பயன்பாடும்' எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது. அம்பேத்கரின் 119வது பிறந்த தினத்தையொட்டி ஏழை குடும்பத்தை சேர்ந்த 119 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. சமூக நீதிக்காக பாடுபட்டு வரும் சான்றோர்களுக்கு "அம்பேத்கர் சேவா ரத்னா' விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior