உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 20, 2010

தானியங்கள் மூலம் மிக நீளமான ஓவியம் ஸ்ரீமுஷ்ணம் கல்லூரி கின்னஸ் சாதனை

ஸ்ரீமுஷ்ணம் : 

                         ஸ்ரீமுஷ்ணம் பி.பி.ஜே. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜெயந்தி பத்மநாபா ஆசிரியர் பயிற்சி நிறுவனம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பி.பி.ஜே. கலை கல்லூரி மற்றும் ஜெயந்தி பத்மநாபா ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில் உலக கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடந்தது. காலை 6.10 மணிக்கு கின்னஸ் உலக சாதனை ஓவியம் வரையும் நிகழ்ச் சியை நிறுவனர் பத்மநாபன் துவக்கி வைத்தார். கின்னஸ் பார்வையாளர் டாக்டர் பிரதீப்குமார், தி.மு.க., நகர செயலாளர் ஆனந்தன் முன்னிலை வகித்தனர். கல்லூரி நிர்வாகி பிரகாஷ் வரவேற்றார். தொடர்ந்து கல்லூரி மற்றும் ஆசிரியர் பயிற்சி மாணவ, மாணவிகள் 547 பேர் காலை 6.10 மணிக்கு ஓவியம் வரையத் துவங்கி பகல் 11.55 மணிக்கு முடித் தனர். இதில் 315.8 மீட்டர் தூரத்திற்கு அரிசி, பருப்பு, கோதுமை, கேழ்வரகு, கம்பு, துவரம் பருப்பு, உளுந்து  உள்ளிட்ட 13 தானியங்களை கொண்டு உலகின் மிக நீளமான ஓவியம் வரையப்பட்டது. தொடர்ந்து கின்னஸ் சாதனை ஆய்வாளர் பிரதீப்குமார் மாணவ, மாணவிகள் வரைந்த ஓவியத்தை லண்டனில் உள்ள கின்னஸ் சாதனை புத்தக நிறுவனத்தாரிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய் தார்.

                           பின்னர் நோட்டரி பப்ளிக்  பாரி மற்றும் "டிவி' மீடியா மற்றும் பத்திரிகைகளின் சாட்சியங்களின் அடிப்படையில் கின்னஸ் நிறுவனத்தினரால் ஒப்புக் கொள்ளப்பட்டது. இதன் மூலம் உலகிலேயே தானியங்களால் வரையப்பட்ட மிக நீளமான ஓவியம் என்ற சாதனையை ஸ்ரீமுஷ்ணம் பி.பி.ஜே. கலை அறிவியல் கல்லூரி, ஜெயந்தி பத்மநாபா ஆசிரியர் பயிற்சி நிறுவனம் பெற் றுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கின்னஸ் சாதனை வெற்றி ஊர்வலம் நடந்தது. இதில் புவி வெப்பமயமாதலை தடுத்தல், விவசாயத்தை ஊக்குவித்தல் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை பிடித்தவாறு மாணவ, மாணவிகள் ஊர்வலமாக சென்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior