உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 20, 2010

கடலூர் மாவட்டத்தில் 2 போலீஸ் ஸ்டேஷன் கடலூரில் ஐ.ஜி., ராஜேஷ்தாஸ் தகவல்

கடலூர் : 

                       "கடலோர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது' என, கடலோர காவல் படை ஐ.ஜி., கூறினார்.
 
                          கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க, மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதையொட்டி, தமிழகத்தில் இந்திய கடற்படை, கடலோர காவல் படை மற்றும் தமிழக போலீசார் இணைந்து, கடலோர கிராமங்களில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை 1,100 கி.மீ., தூரம் கடற்கரை வழியாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த 16ம் தேதி, தமிழக கடலோர காவல்படை ஐ.ஜி., ராஜேஷ்தாஸ் தலைமையில், கமான்டன்ட் சக்திவேல் உள்ளிட்ட 15 பேர், சென்னையிலிருந்து புறப்பட்டனர். இவர்களில் 10 பேர் மோட்டார் சைக்கிளில் கடற்கரை சாலை வழியாகவும், ஐந்து பேர் நீர் மற்றும் மணலில் செல்ல பிரத்யேகமாக வடிவமை க்கப்பட்ட "ஆல்ட்ரைன்' வாகனங்களிலும் பயணம் மற்கொண்டுள்ளனர். கடந்த 17ம் தேதி கடலூர் வந்த இக்குழுவினர், தேவனாம்பட்டினம் பகுதி மீனவர்களிடம், கடல் வழி பாதுகாப்பு குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தினர். நேற்று காலை கடலூரில் இருந்து கடற்கரை வழியாக பிச்சாவரம் புறப்பட்டனர்.ஐ.ஜி., ராஜேஷ்தாஸ் கூறியதாவது:"ஆல்ட்ரைன்' வாகனங் கள்  100 முதல் 160 கி.மீ., வேகம் செல்லும். வாகனத்திலிருந்து ஐந்து கி.மீ., தூரத்திற்கு கடலில் கண் காணிக்க முடியும்.  இந்த வாகனம் செல்வதற்கு  நான்கடி அகல பாதை இருந்தால் போதும்.  75 டிகிரி உயரமுள்ள மேட்டை யும் எளிதில் கடக்கலாம். தேவைப்பட்டால், வனத் துறை மற்றும் சுங்க இலாகா துறை அதிகாரிகளையும் அழைத்துக் கொள்வோம். பயணத்திற்கு ஆறுகள் சிறிது இடையூறாக உள் ளன. பயணத்தின்போது மீனவ கிராமங்களில் விழிப் புணர்வு ஏற்படுத்த, மீனவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறோம்.  மார்ச் 3ம் தேதி பயணம் முடிகிறது. எல்.டி.டி.இ., இயக்கத் தினர் சிலர் மிஞ்சிருக்கலாம். அவர்கள் தமிழகத்திற்குள் வராமல் இருக்க தீவிரமாக கண்காணித்து  வருகிறோம். மேலும் கடலோர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு ராஜேஷ்தாஸ் கூறினார்.

பரங்கிப்பேட்டை அடுத்த புதுக்குப்பம் மீனவ கிராமத்திற்கு வந்த  ஐ.ஜி., ராஜேஷ்தாஸ்  கூறுகையில், 

                     "தமிழகத்தில் 25 கிலோ மீட்டருக்கு ஒரு கடலோர போலீஸ் நிலையம் அமைக்கப்படும்.  தற்போது 12 கடலோர போலீஸ் நிலையம் உள்ளது. இன் னும் 42 போலீஸ் நிலையம் விரைவில் அமைக்கப்படும். கடலூர் மாவட்டத்தில் கடலூர், பிச்சாவரம் இடங்களில் கடலோர போலீஸ் நிலையம் அமைக்கப்படும் என்றார்.அவருடன் பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் புகழேந்தி, பேரூராட்சி துணை சேர்மன் செழியன், கடலோர காவல் படை சப் இன்ஸ்பெக்டர் காளியப்பன், கிராம நிர்வாகிகள் இருந்தனர். பரங்கிப்பேட்டைக்கும் கிள்ளைக்கும் குறுக்கே வெள்ளாறு ஓடுவதால் பரங்கிப்பேட் டையில் இருந்து சிதம்பரம் வந்து அங்கிருந்து கிள் ளைக்கு சென்றனர். அங்கிருந்து படகில் கடலில் சென்று ஆய்வு செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior