உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 20, 2010

சாட்சிகளை திரட்டியவரை கொல்ல முயற்சி பதுங்கியிருந்த இருவர் துப்பாக்கியுடன் கைது

கடலூர் : 

                             பண்ருட்டி அருகே முந்திரிதோப்பில் துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த கொலை, வழிப்பறி சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். கடலூர், மாவட்டம் நெய்வேலி பகுதியில் செயின் பறிப்பு சம்பவம் அதிகரித்ததை தொடர்ந்து எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் உத்தரவின் பேரில் காடாம்புலியூர் இன்ஸ் பெக்டர் மணவாளன் மற் றும் சிறப்புப்படை சப் இன்ஸ்பெக்டர் அமீர்ஜான் தலைமையிலான இரு குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.அதில், கிடைத்த தகவலின் பேரில் காடாம்புலியூர் அருகே முந்திரிதோப்பில் பதுங்கியிருந்த மூன்று நபர்களை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்களில் ஒருவர் ஓடிவிட்டார். நாட்டு துப் பாக்கியுடன் இருவர் சிக்கினர். 

                                காடாம்புலியூர் நாராயணசாமி மகன் ஆறுபடையன்(30), சுப்ரமணியன் மகன் சக்திதாசன்(28) என்பதும், தப்பியோடிவர் ராஜ் மோகன் என்பதும் தெரியவந்தது. இவர்கள் மூவரும் பா.ம.க., பிரமுகர் சீனுவாசன் கொலை வழக்கின் குற்றவாளிகள், இவர்கள் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆடு திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக் குள் நிலுவையில் இருப் பது தெரிய வந்தது. சீனுவாசன் கொலை வழக்கில்  ஆறுபடையனுக்கு எதிராக சாட்சிகளை திரட்டிய ராமலிங்கம் என்பவரை துப்பாக்கி காட்டி கொலை செய்ய முயன்றதும் தெரியவந்தது.அதன்பேரில், காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து, ஆறுபடையன், சக்திதாசன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய ராஜ்மோகனை தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior