உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 20, 2010

திருவந்திபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா

கடலூர் : 

                    மாணவ சமுதாயத்திற்கு பண்பு, பணிவு, படிப்பு அவசியம் இருக்க வேண்டும் என திருவந்திபுரம் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சேஷாத்திரி அய்யங்கார் பேசினார். கடலூர் அடுத்த திருவந்திபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இலக்கிய மன்றம், விளையாட்டு , ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று நடந்தது. தலைமையாசிரியர் பழனி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் புதுச்சேரி தினமலர் நிர்வாகி கே.வெங்கட்ராமன்,  புதுப்பிக்கப்பட்ட கம்ப்யூட்டர் அறையை திறந்து வைத்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.உதவி தலைமையாசிரியர்கள் கண் ணன் ஆண்டறிக்கையும், சக்கரவர்த்தி இலக்கிய மன்ற அறிக்கையும் வாசித் தனர்.

                          தமிழாசிரியர் மரியஜோசப் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். திருவந்திபுரம் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன்,  ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் நரசிம்மன், ஓய்வு பெற்ற தமிழாசிரியர் துரை வளவன், ராஜகோபாலன் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.அரையாண்டு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகள் மற்றும் விளையாட்டு, வினாடி வினா, கோலம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது.பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சேஷாத்திரி அய்யங்கார் தலைமை தாங்கி பேசுகையில்,"தற்போது அரசு, கல்வி முறையில் சமச்சீர் கல்வியை கொண்டு வரப்போகிறது.
                          இதனால் மெட்ரிக்குலேஷன், ஸ்டேட் போர்டு எல்லாம் ஒரே கல்வியின் கீழ் வந்து விடும். அரசு பள்ளி, மெட்ரிக் பள்ளி என இருக்காது.  கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக சைக்கிள், சீருடை உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. இப்பள்ளியை பொறுத்தவரை அனைத்து வசதிகளும் செய்து, சுற்றுச் சுவரும் கட்டிக் கொடுத்துள்ளேன். சைக்கிள் ஸ்டாண்டு விரைவில் கட்டிக் கொடுக்கப்படும். மாணவ, மாணவிகளுக்கு பக்தி, பண்பு, படிப்பு ஆகியவை அவசியம் இருக்க வேண்டும். மாணவ சமுதாயம் எதிர்காலத்தில் நன்றாக வந்தால் தான் ஜனநாயகம் நீடிக்கும். ஜனநாயகம் முக்கியம் என கருதுவதால் தான் தினமலர் நாளிதழ் கல்விக்கு முக்கியத்துவம் தருகிறது. 10 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகள் தைரியமாக வருகின்ற தேர்வை எதிர் கொள்ள வேண்டும்' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior