உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 20, 2010

ஸ்டாலினுக்கு கருப்பு கொடி எம்.ஜி.ஆர்., இளைஞரணி எச்சரிக்கை

கடலூர் : 

                          பாதாள சாக்கடை திட்டம் எத்தனை மாதத்திற்குள் முடிக்கப்படும் என்பதை உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலின் தெளிவுப்படுத்தாவிட்டால், அவர் கடலூருக்கு வரும் போது கருப்பு கொடி காட்டுவேம் என எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாநில செயலர் ஆதி ராஜாராம் பேசினார். 

கடலூரில் பாதாள சாக்கடை திட்டத்தை மந்தமாக செயல்படுத்தி வரும் நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது: 

                           கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கடலூர் நகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த 40.44 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பின் தி.மு.க., ஆட்சியில் அதே திட்டத்திற்கு மேலும் 25 கோடி ரூபாய் சேர்த்து திட்டம் நிறைவேற்றபட்டுள்ளது. இதற்கான காலக்கெடு முடிந்து 20 மாதம் ஆகியும் பணிகள் முடியவில்லை. பாதாள சாக்கடை பணி எத்தனை மாதத்தில் முடிக்கப்படும் என்பதை உள்ளாட்சி துறை அமைச்சர் ஸ்டாலின் தெளிவுப்படுத்த வேண்டும். இல்லையெனில் கடலூருக்கு ஸ்டாலின் வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம். அவர் காரை முற்றுகையிடுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior