உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 17, 2010

ஜெ., தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்: நெய்வேலியில் கட்சி நிர்வாகிகள் முகாம்


நெய்வேலி:

                        நெய்வேலியில் அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெ., தலைமையில் நாளை மாலை நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், தொண்டர்களைத் திரட்ட அ.தி.மு.க.,வினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.நெய்வேலி பிளாக் 9ல் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள எம்.ஜி.ஆர்., சிலையை, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெ., நாளை மாலை திறந்து வைக்கிறார். தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டைக் கண்டித்து, நெய்வேலி அண்ணா திடலில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பேசுகிறார்.

                    ஜெ., வருகையையொட்டி கட்சியின் முன்னணி நிர்வாகிகளான ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் உள்ளிட்டோர் நெய்வேலியில் முகாமிட்டு, தொண்டர்கள் கூட்டத்தை கூட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் செல்லும் மக்களுக்கு, நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்பட மாட்டாது என, அந்தந்த பகுதி உள்ளாட்சி நிர்வாகிகள் மிரட்டி வருவதாகத் தெரிகிறது. இதனால், ஜெ.,யைப் பார்ப்பதா, வேலையைப் பார்ப்பதா என்ற குழப்பத்தில் மக்கள் உள்ளனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior