உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 17, 2010

சிதம்பரத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 சிதம்பரம் : 

                காஷ்மீரில் அரசு ஊழியர்கள் கோரிக்கையை ஏற்காமல் எஸ்மா திட்டத்தில் பழி வாங்கியதை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காஷ்மீர் அரசு ஊழியர்கள், 6வது ஊதியக் குழுவை அமல்படுத்தக் கோரியும், பிற கோரிக் கைகளை நிறைவேற்றக் கோரி பல கட்ட போராட்டம் நடத்தினர். காஷ்மீர் அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்காமல் எஸ்மா திட்டத்தின் கீழ் பழி வாங்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சங்க வட்டத் தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். மகாலிங்கம், பழனி, பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். வட்டத் துணைத் தலைவர் தயாளன் நன்றி கூறினார்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior