உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 17, 2010

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

 கடலூர் : 

                 தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவரை கைது செய்யக்கோரி கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வடலூர் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி கடந்த வாரம் நடந்தது. இந்த பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொருளாளர் நரசிம்மனை கடந்த 10ம் தேதி தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் மணிவாசகம் தாக்கினார். இதுகுறித்து வடலூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனைக் கண்டித்தும், மணிவாசகத்தை உடன் கைது செய்யக்கோரி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் நேற்று மாலை கடலூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப் பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜேந்திரன், சண்முகம், காளமேகம் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் காசிநாதன் ஆர்ப்பாட்டத்தை துவங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், வங்கி ஊழியர் சம்மேளன மருதவாணன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாவட்ட பொருளாளர் நரசிம்மன் நன்றி கூறினார்.

download this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior