உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 17, 2010

பைக்கை பறிக்க முயன்ற முகமூடி கொள்ளையர்கள்

 கடலூர்:

                மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயியை முகமூடிக் கொள்ளையர்கள் கல்லால் அடித்து, மோட்டார் சைக்கிளை பறிக்க முயன்ற சம்பவம் கடலூர் அருகே நடந்துள்ளது. கடலூர் அருகே மேலக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கண்ணன் (55). வியாழக்கிழமை இரவு அவர், மோட்டார் சைக்கிளில் மேலக்குப்பத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கிச் சென்று கொண்டு இருந்தார். மேலக்குப்பத்தை அடுத்து உள்ள ஆலமரம் அருகே சென்று கொண்டு இருந்தபோது, ஆலமரத்தின் பின்னால் இருந்து கண்ணன் மீது சரமாரியாகக் கற்கள் வீசப்பட்டன. பலத்தக் காயம் அடைந்து நிலைதடுமாறிய நிலையில், முகமூடி அணிந்து இருந்த கொள்ளையர்கள் ஓடிவந்து மோட்டார் சைக்கிளைப் பறிக்க முயன்றனர். சுதாரித்துக் கொண்ட கண்ணன் அவர்களிடம் இருந்து தப்பி, மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச்சென்று தப்பினார்.இது பற்றி தூக்கணாம்பாக்கம் போலீஸôர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். காயம் அடைந்த கண்ணன் கடலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior