உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 15, 2010

பிளஸ் 2 பொது தேர்வில் சி.கே., பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

கடலூர் : 

                 கடலூர் சி.கே.பள்ளி மாணவி சாய்சுருதி 1146 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். பிளஸ் 2 பொது தேர்வில் கடலூர் சி.கே., பள்ளியில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். 11 மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றனர். அதில் மாணவி சாய்சுருதி 1146 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். அவர் தமிழில் 183, ஆங்கிலம் 183, இயற் பியல் 197, வேதியியல் 193, கம்ப்யூட்டர் சயின்ஸ் 199, கணிதம் 191 மதிப்பெண் பெற்றார். மேலும் மாணவி பிரியங்கா 1146 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், ராஜலட்சுமி 1136 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பிடித்தனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி இயக்குனர் சந்திரசேகர், முதல்வர் தாஷியஸ், கவுன்சிலர்கல் யாணி பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவிகள் உட்பட பலர் பாராட்டினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior