உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 15, 2010

கடலூரில் 210 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

கடலூர் : 

                கடலூர் முதுநகரில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த 210 லிட்டர் மண்ணெண்ணெய்யை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மண்ணெண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பறக்கும்படை தாசில்தார் கண்ணன் தலைமையில் அதிகாரிகள் கடலூர் முதுநகர் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது பச்சையாங்குப்பம் இரட்டைரோடு அருகே பூட்டியிருந்த ஒரு வீட்டை திறந்து பார்த்தபோது அங்கு 35 லிட்டர் கொண்ட 6 கேன்களில் 210 லிட்டர் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருந்தை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். ஆய்வின்போது வருவாய் அதிகாரிகள் சங்கர், சுப்ரமணி, வி.ஏ.ஓ., ஜெயபால் ஆகியோர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior