உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 17, 2010

திறந்த வெளியில் கிடந்து பாழாகும் தொகுப்பு வீடு கதவு, ஜன்னல்கள்

ராமநத்தம் : 

             மங்களூர் ஒன்றிய அலுவலகத்தில் தொகுப்பு வீடுகளுக்காக வழங்கப்படும் கதவு, ஜன்னல்கள் பாதுகாப்பான இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

               மங்களூர் ஒன்றியத்தின் கீழ் உள்ள ஊராட்சிகளுக்கு பல்வேறு திட்டங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளை ஆண்டு தோறும் தேர்வு செய்து தொகுப்பு வீடுகள், அரசு திட்டங்களின் கீழ் ஊராட்சிக்கு கட்டடங்கள் வழங்கப்படுகிறது. தொகுப்பு வீடுகள், ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் ஜன்னல் கள் மற்றும் கதவுகள் ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பற்ற நிலையில் திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் மழையில் நனைந்து துருப் பிடித்தும், ஓட்டை விழுந்தும் காணப்படுகிறது. மேலும் கதவு, ஜன்னல் கள் திருடு போயுள்ளன. ஊராட்சி நிர்வாக கட்டடங்கள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளுக்கு வழங்கப்படும் தொகுப்பு வீடுகளுக்கு தரமான, பாதுகாப்பான கதவு, ஜன்னல்களை வழங்க வேண்டும். கேட்பாரற்று கிடக்கும் கதவு, ஜன்னல்களை பாதுகாப் பாக அறையில் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior