உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 17, 2010

சிதம்பரம் அருகே பின்னத்தூரில் காட்சி பொருளாக நிற்கும் 'ஹைமாஸ்'

கிள்ளை : 

               சிதம்பரம் அருகே பின்னத்தூரில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்கு காட்சிப் பொருளாக உள்ளது.

               பரங்கிப்பேட்டை ஒன்றியம் பின்னத்தூர் ஜமாத் நிர்வாகத்தினரின் கோரிக்கையை ஏற்று பின்னத்தூர் கிழக்கு பகுதிக்கு செல்லும் சாலையில் பள்ளிவாசல், அரசு உயர் நிலைப்பள்ளி என நான்கு முனை சந்திப்பில் ஒருலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் ஹைமாஸ் விளக்கு கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. ஹைமாஸ் விளக்கு அமைத்த சில தினங்கள் மட்டும் அப்பகுதி பிரகாசமாக இருந்தது.

                    இதனால் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தெருவிளக்கை மாற்றி வேறு இடத்தில் அமைத்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹைமாஸ் விளக்கு எரியாமல் காட்சிப் பொருளாக உள் ளதால் அப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது. தற்போது ஹைமாஸ் விளக்கு அமைக்கப் பட்டுள்ள நான்குமுனை வீதி அருகில் இந்தியன் வங்கி, டி.என். சி.எஸ்.சி. நெல்கொள்முதல் நிலையம், தொலைபேசி கிளை அலுவலகம், ஜமாத் பள்ளிவாசல், அரபிக்கல்லூரி, அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் இரு தனியார் பள்ளிகள் இருப்பதால் இரவில் யார் வருகின்றனர் எனத் தெரியாமல் அப்பகுதியினர் விரக்தியில் உள்ளனர். எனவே காட்சிப்பொருளாக உள்ள விளக்கை பொது மக்கள் நலன் கருதி சரி செய்ய சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior