உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 17, 2010

அரசு பணியாளர் பேரியக்க மே தின கருத்தரங்கம்

கடலூர் : 

              தமிழ்நாடு அரசு பணியாளர் பேரியக்கம் சார்பில் கடலூர் டவுன்ஹாலில் மேதின விழா கருத்தரங்கம் நடந்தது.

           கரத்தரங்கில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநிலத் தலைவராக அறவாழி, துணைத் தலைவர்களாக சங்கீதா, சுப்ரமணியன், செயலாளராக தென்னரசு, பிரசார செயலாளராக மாயக்கண்ணன், தலைமை நிலைய செயலாளராக ராஜன், பொருளாளராக செல்வராஜ் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் மாவட்டத் தலைவராக ராஜமச்சேந்திரசோழன், துணைத் தலைவராக சரவணன், செயலாளராக சரவணபெருமாள், பிரசார செயலாளராக வீரக்குமார், பொருளாளராக மணிகண்டன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

                  கூட்டத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். 6வது ஊதியக்குழு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். சதவீத அடிப்படையில் வீட்டு வாடகைப்படி வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு 10 ஆண்டிற்கு ஒருமுறை ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து மேதின விழா கருத்தரங்கம் நடந்தது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior