உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 17, 2010

கால​மா​னார் எழுத்​தா​ளர் அனு​ராதா ரம​ணன்


          பிர​பல எழுத்​தா​ளர் அனு​ராதா ரம​ணன் ​(62) சென்​னை​யில் ஞாயிற்றுக்கிழமை கால​மா​னார்.​உடல்​ந​லக் குறைவு கார​ண​மாக அவர் மருத்துவ​ம​னை​யில் சிகிச்சை பெற்று வந்​தார்.​சென்னை திரு​வான்​மி​யூ​ரில் வசித்து வந்த அனு​ராதா ரம​ணன்,​​ ஆயி​ரத்​துக்​கும் மேற்​பட்ட சிறு​க​தை​க​ளை​யும்,​​ 850 நாவல்​க​ளை​யும் எழு​தி​யுள்​ளார்.​ 
 
                சிறை,​​ ஒரு வீடு இரு வாசல்,​​ கூட்​டுப் புழுக்​கள் ஆகிய இவ​ரு​டைய நாவல்​கள் திரைப்​ப​டங்​க​ளாக எடுக்​கப்​பட்​டுள்​ளன.​எழுத் ​துத் துறை​யில் சிறந்து விளங்​கி​ய​தற்​காக முன்​னாள் முதல்​வர் எம்.ஜி.ஆரி​ட​மி​ருந்து தங்​கப் பதக்​கம் மற்​றும் சிறந்த எழுத்​தா​ள​ருக்​கான ராஜீவ் காந்தி விருது என பல்​வேறு விரு​து​களை இவர் பெற்​றுள்​ளார்.​கடந்த சில நாள்​க​ளாக உடல் நிலை சரி​யில்​லா​மல் இருந்த இவர்,​​ அடை​யா​றில் உள்ள தனி​யார் மருத்​து​வ​ம​னை​யில் சேர்க்கப்பட்டிருந்​தார் .​ஞாயிற்​றுக்​கி​ழமை மாலை மார​டைப்பு ஏற்​பட்டு அவர் உயி​ரி​ழந்​தார்.​ அவ​ரு​டைய உடல் திரு​வான்​மி​யூர் வால்​மீகி நக​ரில் அவ​ரது இல்லத்​தில் வைக்​கப்​பட்​டுள்​ளது.​ திங்​கள்​கி​ழமை மாலை 4 மணிக்கு பெசன்ட் நக​ரில் உள்ள எரி​வாயு தகன மயா​னத்​தில்,​​ அவ​ரு​டைய உடல் தன​கம் செய்​யப்​பட உள்​ளது.​ மறைந்த அனு​ராதா ரம​ண​னுக்கு இரண்டு மகள்​கள் உள்​ள​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior