உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 17, 2010

சேத்தியாத்தோப்பு தனி தாலுகா பா.ம.க., கோரிக்கை

சேத்தியாத்தோப்பு : 

          சேத்தியாத்தோப்பை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா உருவாக்க அரசுக்கு பா.ம.க., கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கடலூர் தெற்கு மாவட்ட பா.ம.க., செயலாளர் சிட் டிபாபு அரசுக்கு அனுப்பியுள்ள மனு: 

                  சேத்தியாத்தோப்பை சுற்றியுள்ள புவனகிரி, கம்மாபுரம், கீரப்பாளையம், காட்டுமன்னார்கோவில் ஒன்றியங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தாலுகா அலுவலக பணிகளுக்காக விருத்தாசலம், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் ஆகிய ஊர்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது. பெரும் பாலான கிராம மக்கள் மூன்று பஸ் மாறி தான் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பண விரயம் மன உளைச்சல் காரணமாக மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் நிறைந்த சேத்தியாத்தோப்பை தலைமையிடமாகக் கொண்டு தனி தாலுகா உருவாக்கி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior