உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 17, 2010

சிதம்​ப​ரம் அரசு மருத்​து​வ​மனை நோயா​ளி​கள் தண்​ணீ​ரின்றி அவ​தி

சிதம்​ப​ரம்:

                சிதம்​ப​ரம் காம​ராஜ் அரசு மருத்​து​வ​ம​னை​யில் கடந்த 3 தினங்​க​ளாக மோட்​டார் பழு​தால் தண்​ணீன்றி நோயா​ளி​க​ளும்,​​ மருத்​து​வர்​க​ளும் பெரும் அவ​தி​யுற்​றுள்​ள​னர்.​
சி​தம்​ப​ரம் காம​ராஜ் அரசு மருத்​து​வ​ம​னை​யில் தண்​ணீர் பற்​றாக்​கு​றையை போர்​வெல் அமைக்​கப்​பட்டு போக்கு சிறிய மேல்​நிலை குடி​நீர்த் தேக்​கத் தொட்டி மூலம் நீரேற்றி குடி​நீர் வழங்​கப்​பட்டு வந்​தது.​    இந்​நி​லை​யில் நீரேற்​றும் மோட்​டா​ரில் காயில் பழு​த​டைந்​த​தால் கடந்த 3 தினங்​க​ளாக தண்​ணீ​ரின்றி உள்​நோ​யா​ளி​க​ளும்,​​ மருத்​து​வர்​க​ளும் பெரும் அவ​திக்​குள்​ளா​கி​யுள்​ள​னர்.​ ம​கப்​பேறு பிரி​வில் பிர​ச​வத்​துக்கு வரும் பெண்​க​ளுக்கு இனிமா கொடுக்க அரு​கில் உள்ள டீக்​க​டை​யில் தண்​ணீர் பெறும் நிலை உள்​ளது.​  கழிபபறை​கள் உப​யோ​கப்​ப​டுத்​தப்​பட முடி​யா​மல் நோயா​ளி​கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.​   அ​ரசு மருத்​து​வ​ம​னை​யில் தினந்​தோ​றும் குடி​நீர்த் தொட்டி வழிந்து அரு​கில் உள்ள சாலை​யில் ஓடி​வந்​தது.​ குறிப்​பிட்ட நேரத்​தில் மோட்​டாரை இயக்கி நீரை சேமிக்​கா​மல் ​ மோட்​டாரை நீண்ட நேரம் இயங்​கி​ய​தால் மின்​மோட்​டார் பழு​த​டைந்​த​தாக அங்​குள்ள உள்​நோ​யா​ளி​கள் தெரி​விக்​கின்​ற​னர்.​    எ​னவே நோயா​ளி​கள் நலன் கருதி உட​ன​டி​யாக நீரேற்​றும் மோட்​டாரை போர்க்​கால அடிப்​ப​டை​யில் பழுது நீக்க மாவட்ட சுகா​தா​ரத்​துறை நட​வ​டிக்கை மேற்​கொள்ள வேண்​டும் என தமிழ்​நாடு நுகர்​வோர் குழு​மச் செய​லா​ளர் சி.டி.அப்​பாவு வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior