உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 17, 2010

தனி​யார் கட்​ட​டத்​தில் தள்​ளா​டும் விருத்​தா​ச​லம் கிளை நூல​கம்

விருத்​தா​ச​லம்:

                 விருத்​தா​ச​லத்​தில் உள்ள அரசு கிளை நூல​கம் கடந்த 55 ஆண்​டு​க​ளாக தனி​யார் கட்​ட​டத்​தி​லேயே இயங்கி வரு​கி​றது.​ ​வி​ ருத்​தா​ச​லத்​தில் அரசு கிளை நூல​கம் 1955-ம் ஆண்டு அமைக்​கப்​பட்​டது.​ 55 ஆண்​டு​கள் கடந்த நிலை​யி​லும் கிளை நூல​கம் இன்​றும் தனி​யார் கட்​ட​டத்​தி​லேயே இயங்கி வரு​கி​றது.​ தற்​போது விருத்​தா​ச​லம் ஜங்​ஷன் சாலை​யில் ஒரு சிறிய கட்​ட​டத்​தின் மேல் தளத்​தில்,​​ போது​மான இட​வ​சதி இன்றி நூல​கம் உள்​ளது.​ இந்​நூ​ல​கத்​தில் நிரந்த உறுப்​பி​னர்​க​ளாக 5500 பேர் உள்​ள​னர்.​ மேலும் நாளொன்​றுக்கு 200-க்கும் மேற்​பட்ட வாச​கர்​கள் நூல​கத்தை பயன்​ப​டுத்தி வரு​கின்​ற​னர்.​ ​இந்​நூ​ல​ கக் கட்​ட​டத்​தில் போது​மான வசதி இல்​லா​த​தால் வாச​கர்​கள் அமர்ந்து படிப்​ப​தற்​கும் குறிப்பு எடுத்​துச் செல்​ல​வும் முடி​யாத நிலை உள்​ளது.​ 

                  இதே​போன்று கணினி வைப்​ப​தற்கு தனி அறை​யில்​லா​த​தால் கணினி பயன்​பா​டும் குறை​வா​கவே உள்​ளது.​ குறிப்​பு​தவி,​​ சிறு​வர் பிரிவு மற்​றும் குடி​மைப்​பணி நூல்​களை வைப்​ப​தற்​கும் தனி இடம் இல்லை.​ இத​னால் அனைத்து நூல்​க​ளை​யும் ஒரே இடத்​தில் வைக்​க​வேண்​டிய சூழல் ஏற்​ப​டு​கி​றது.​ இத​னால் குறிப்​பு​தவி நூல்​களை எடுக்க வாச​கர்​கள் வரும்​போது புத்​த​கம் எங்கு இருக்கிறது எனத் தெரி​யா​மல் சிர​மத்​துக்கு உள்​ளா​கின்​ற​னர்.​ மேலும் நூல​கத்​துக்கு வரும் புது புத்​த​கங்​களை வைப்​ப​தற்கு இடம் இல்​லா​த​தால் பல புத்​த​கங்​கள் மூட்​டை​யி​லேயே கட்​டப்​பட்​டும்,​​ திரும்ப அனுப்​பும் நிலை​யும் ஏற்​ப​டு​கி​றது.​இ​து​கு​றித்து விருத்​தா​ச​லத்​தைச் சேர்ந்த திரு​மு​து​குன்​றம் எழுத்​தா​ளர்​கள் கூட்​ட​மைப்​பின் ஒருங்​கி​ணைப்​பா​ளர் கவி​ஞர் ரத்​தின.புக​ழேந்தி கூறி​யது:​வி​ருத் ​தா​ச​லத்​தில் கடந்த 55 ஆண்​டு​க​ளுக்கு மேலா​கவே அரசு கிளை நூல​கம் தனி​யார் கட்​ட​டத்​தில் இயங்கி வரு​கி​றது.​ இது​கு​றித்து பல்​வேறு கோரிக்​கை​களை தொடர்​பு​டைய அதி​கா​ரி​க​ளி​டம் முறை​யிட்​டோம்.​ இறு​தி​யாக விருத்​தா​ச​லம் அரசு ஆண்​கள் மேல்​நி​லைப் பள்​ளி​யில் நூல​கம் கட்​டு​வ​தற்கு இடம் ஒதுக்​கப்​பட்​டது.​ இதற்கு நக​ராட்சி மற்​றும் கோட்​டாட்​சி​யர் அலு​வ​ல​கம் சார்​பில் அனு​மதி வழங்​கப்​பட்​டது.​ ஆனால் பள்​ளி​யில் நூல​கக் கட்​ட​டம் அமைப்​ப​தற்கு மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வ​லர் அனு​மதி தர​வில்லை என கூறப்​ப​டு​கி​றது.​

இது குறித்து மாவட்ட முதன்​மைக்​கல்வி அலு​வ​ல​ரி​டம் கேட்​ட​தற்கு,​​ 

                        பள்ளி இடங்​களை பொது பயன்​பாட்​டுக்கு வழங்​கக்​கூ​டாது என கல்வி இயக்​கு​நர் சுற்​றிக்கை விடுத்​துள்​ளார்.​ எனவே இறுதி முடி​வெ​டுக்​கும் அதி​கா​ரம் இயக்​கு​ந​ருக்கு மட்​டுமே உண்டு என மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வ​லர் கூறி​ய​தா​கத் தெரி​வித்​தார்.​நூ​ல​கத் ​துக்கு தொடர்​பு​டைய அர​சுத்​துறை அதி​கா​ரி​கள் உட​ன​டி​யா​கத் தலை​யிட்டு விருத்​தா​ச​லம் அரசு கிளை நூல​கத்தை சொந்த கட்​ட​டத்​தில் அமைத்​துத்​தர வேண்​டும் என்​பதே விருத்​தா​ச​லம் பகுதி மக்​க​ளின் எதிர்​பார்ப்​பா​கும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior