உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 17, 2010

வட​லூ​ரில் மாநில அள​வி​லான தக​வல் தொழில்​நுட்ப கருத்​த​ரங்கு

நெய்வேலி:

                 வட​லூர் ஓ.பி.ஆர்.​ கல்​வி​யி​யல் கல்​லூ​ரி​யில் "கல்​வி​யி​யல் தக​வல் தொடர்பு மற்​றும் தொழில்​நுட்​பம்' என்ற தலைப்​பில் மாநில அள​வி​லான ஒரு​நாள் கருத்​த​ரங்​கம் அண்​மை​யில் நடை​பெற்​றது.​ க​ருத்​த​ரங்​கில் 300-க்கும் மேற்​பட்ட மாண​வி​கள் பங்​கேற்​ற​னர்.​ கருத்​த​ரங்​குக்கு கல்​லூ​ரி​யின் செய​லர் ஆர்.செல்​வ​ராஜ் தலைமை வகித்​தார்.​ சிதம்​ப​ரம் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக் கழக மூத்​தோர் கல்​வித் துறை​யின் பேரா​சி​ரி​யர் டாக்​டர் என்.ஓ.நெல்லையப்பன் கருத்​த​ரங்கை தொடங்கி வைத்​துப் பேசி​னார்.​ பாரதியார் பல்​க​லைக் கழ​கத்​தின் கல்​வித் தொழில் நுட்​பத்​துறை பேரா​சி​ய​ரி​யர் சிங்​கா​ர​வேலு,​தக​வல் தொடர்பு மற்​றும் தொழில்​நுட்​பத்​திற்கு ஆங்​கில அவசியத்தை எடுத்​து​ரைத்​தார்.​இன்​டெல் நிறு​வ​னத்​தின் துணை மேலா​ளர் பி.ஆர்.சங்​கரி வகுப்​பறை மேலாண்மைக் குறித்து விளக்​கி​னார்.​ ஓ.பி.ஆர். ​ கல்வி நிறு​வ​னத்​தின் நிர்​வாக அலு​வ​ல​ரும்,​கருத்​த​ரங்க ஆலோ​ச​க​ரு​மான லதா ராஜ வெங்​க​டே​சன் வர​வேற்​றார்.​ கல்​லூ​ரி​யின் முதல்​வர் பொன்​மொ​ழி​சு​ரேஷ் நன்றி கூறி​னார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior