உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 17, 2010

சாதிக் கல​வ​ரத்தால் பாதிக்கப்பட்ட ​தாழ்த்​தப்​பட்ட மக்களுக்கு நிவா​ர​ணம்​: ஆட்​சி​ய​ரி​டம் கோரிக்கை

கட​லூர்:

               கட​லூர் அருகே சாதிக் கல​வ​ரத்​தில் பாதிக்​கப்​பட்ட தாழ்த்​தப்​பட்ட மக்​க​ளுக்கு நிவா​ர​ணம் வழங்க வேண்​டும் என்று,​​ விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்சி சார்​பில்,​​ அண்​மை​யில் மாவட்ட ஆட்​சி​ய​ரி​டம் மனு அளிக்​கப்​பட்​டது.​

விடு​த​லைச் சிறுத்​தை​கள் கட்சியின் கட​லூர் மாவட்​டச் செய​லா​ளர் சு.திரு​மா​றன் உள்​ளிட்ட நிர்​வா​கி​கள் பாதிக்​கப்​பட்ட மக்​க​ளு​டன் வந்து,​​ ஆட்​சி​ய​ரி​டம் அளித்த மனு:​ 

                   ​க​ட​லூர் அருகே நாயக்​கர் நத்​தம் கால​னி​யைச் சேர்ந்த செஞ்​சி​வேல்,​​ சாதிக் கல​வ​ரத்​தால் பாதிக்​கப்​பட்​டார்.​ சுமார் ரூ.2.5 லட்​சம் மதிப்​புள்ள பொருள்​களை அவர் இழந்​துள்​ளார்.​ ஆனால் அவ​ருக்கு இது​வரை எந்த நிவா​ர​ண​மும் கிடைக்​க​வில்லை.​மே​லும் இந்​தக் கால​னி​யில் சாதிக் கல​வ​ரத்​தில் பாதிக்​கப்பட்ட இதர 8 குடும்​பத்​தி​ன​ருக்​கும் நிவா​ர​ணம் வழங்​கப்​ப​ட​வில்லை.​ பாதிக்​கப்பட்ட மக்​க​ளுக்கு விரை​வில் நிவா​ர​ணம் வழங்க வேண்​டும்.​கு​றிஞ்​சிப்​பாடி வட்​டம் கண்​ணாடி ஊராட்​சிக்கு உள்​பட்ட அண்ணா நக​ரில் 12 குடும்​பங்​க​ளுக்கு வீட்​டு​ம​னைப் பட்டா 1985-ம் ஆண்டு வழங்​கப்​பட்​டது.​ ஆனால் இது​வரை அவர்​க​ளுக்கு நிலம் ஒப்​ப​டைக்​கப்​ப​ட​வில்லை.​ அவர்​க​ளுக்கு வீட்​டு​மனை வழங்க வேண்​டும்.​ ​சிப்​காட் பகு​தி​யில் இயங்கி வரும் டாஸ்​மாக் கிடங்​கில் அப்​ப​கு​தி​யைச் சேர்ந்த தாழ்த்​தப்​பட்ட உள்​ளூர் மக்​க​ளுக்கு,​​ சுமை​தூக்​கும் வேலை வழங்க வேண்​டும்.​ சாதிய அடிப்​ப​டை​யில் அங்கு பணி மறுக்​கப்​ப​டு​கி​றது.​ தாழ்த்​தப்​பட்ட மக்​க​ளுக்கு அங்கு முன்​னு​ரிமை அளிக்க வேண்​டும்.​க​ட​லூர் அருகே எம்.பி.​ அக​ரம் ஊராட்சி மேல்​நிலை நீர்த் தேக்​கத் தொட்டி இயக்​கு​ந​ருக்கு 2007 முதல் ஊதி​யம் வழங்​கப்​ப​ட​வில்லை.​ அர​சி​யல் உள்​நோக்​கு​டன் பழி​வாங்​கும் நட​வ​டிக்​கை​யில் அவர் பாதிக்​கப்​பட்டு உள்​ளார்.​ முறைப்​படி பணி நிய​ம​னம் செய்​யப்​பட்ட அவ​ருக்கு ஊதி​யம் வழங்க வேண்​டும் என்​றும் மனு​வில் கோரப்​பட்டு உள்​ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior