உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 08, 2010

டாஸ்மாக் ஊழியரை மிரட்டி ரூ. 20 ஆயிரம் பறிப்பு: வார இதழ் நிருபர் கைது: மற்றொருவருக்கு வலை

கடலூர்:

                  டாஸ்மாக் மேற்பார்வையாளரை மிரட்டி 20 ஆயிரம் ரூபாய்  பணத்தை பறித்துச் சென்ற வார பத்திரிகை நிருபரை போலீசார் கைது செதனர். மற்றொரு நிருபரை தேடிவருகின்றனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சேப்பாக்கத்தை சேர்ந்தவர் செல்லதுரை. அஞ்சாநெஞ்சன் என்ற வார பத்திரிகை நிருபர். ராமநத்தத்தை அடுத்த வாகையூரை சேர்ந்தவர் மேனன் என்கிற கிருஷ்ணமேனன்(38). இவர், வேங்கை வெற்றி முரசு என்ற வார இதழின் நிருபர்.

                     இருவரும் கடந்த 3ம் தேதி ராமநத்தம் அடுத்த ஏ.பாளையம் டாஸ்மாக் கடைக்கு சென்று அங்கு பணியில் இருந்த மேற்பார்வையாளர் கண்ணனிடம், நீங்கள் பீரை கூடுதல் விலைக்கு விற்பதை போட்டோ எடுத்து வைத்திருக்கிறோம், அதை பத்திரிகையில் வெளியிட்டுவிடுவோம் என, மிரட்டி 20 ஆயிரம் ரூபாயை வாங்கிச் சென்றனர். இது குறித்து கண்ணன் கொடுத்த புகாரின் பேரில், ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து மேனன் என்கிற கிருஷ்ணமேனனை கைது செதனர், செல்லதுரையை தேடிவருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior