உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 08, 2010

பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் சேரவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது


கடலூர் : 

                 பிற்படுத்தப்பட்ட விடுதியில் சேர விரும்பும் மாணவ மாணவியர்கள் வரும் ஜூலை 31ம் தேதிக் குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

                              மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கென பள்ளி மற்றும் கல் லூரி விடுதிகள் 61 இயங்கி வருகின்றன. பள்ளிகளில் நான்காம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பட்டபடிப்பு, பட்டமேற்படிப்பு, பட்டயபடிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியர் இவ் விடுதியில் தங்கி பயில தகுதியுடையவர்கள். அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் இலவச உணவு மற்றும் உறைவிடம் அளிக்கப்படும். 10ம் வகுப்பு வரை விடுதி மாணவ மாணவியர்களுக்கு 2 செட் பாலியஸ்டர் சீருடைகள் வழங்கப்படும்.

                                 இலவச வழிகாட்டி நூல்கள் வழங்கப்படும்.விடுதிகளில் சேர பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் அவர்களின் இல்லத்திலிருந்து பயிலுகின்ற பள்ளி, கல்லூரிக்கான இடைவெளி தூரம் 5 கி.மீ.,க்கு கூடுதலாக இருக்க வேண்டும். விடுதிகளில் சேர விரும்பும் பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியர்கள் காப்பாளர், பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்று வரும் 31.7.2010க்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior