உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 08, 2010

அலுவல் சாராதவர்களுக்கு முத்திரை செய்து கொடுத்தால் நடவடிக்கை: கலெக்டர்

கடலூர் : 

               அலுவல் சாரா தனி நபர்களுக்கு அலுவலக முத்திரை எக்காரணம் கொண்டும் செய்து தரக்கூடாது என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

                  கடலூர் மாவட்டத்தில் அலுவல் சார்ந்த போலி முத்திரைகள் புழக்கத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது. இப்போலி முத்திரைகளால் பொதுமக்கள் ஏமாற்றப்பட்டு பலவிதமான இழப்புகளுக்கு ஆளாகிறார்கள். எனவே, அலுவல் முத்திரை தயார் செய்பவர்கள் சம்மந்தப் பட்ட அலுவலர்களின் அனுமதி ஆணை பெற்ற பிறகே முத்திரை தயாரித்து தர வேண்டும். அலுவல் சாரா தனிநபர்களுக்கு அலுவலக முத்திரை எக்காரணம் கொண்டும் செய்து தரக்கூடாது.

                      மீறினால் இந்திய தண்டனைச் சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறார்கள். மேலும் பயனாளிகள் மற் றும் பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் சமூக விரோதிகளை அணுகி போலி முத்திரையிட்ட சான்றுகளைப் பெற முயல வேண்டாம். ஊக்குவிக்க வேண்டாமெனவும் கேட்டுக் கொள் ளப்படுவதுடன் இவ்வகையில் குற்ற செயல்களுக்கு உடந்தையாக இருந்தால் அவர்கள் மீதும் இந்திய தண்டனை சட்டத்தின்கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior