உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 08, 2010

சிதைந்து கிடக்கும் கடலூர் சிலவர் பீச் படகு குழாம்


2 ஆண்டுகளாகச் சிதைந்து கிடக்கும் கடலூர் சில்வர் பீச் சுற்றுலாப் பயணிகளுக்கான படகுத்துறை.
கடலூர்:
 
                கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக பல லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்ட,​​ வளர்ச்சிப் பணிகளில் பெரும்பாலானவை பயனின்றி கிடக்கின்றன.
 
                           கடலூர் சில்வர் பீச்,​​ கடலூர் மாவட்ட சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டு உள்ளது.​ இதனால் பல ஆண்டுகளாக 40 லட்சத்துக்கு மேல் செலவிட்டு,​​ உப்பங்கழியில் படகுப் போக்குவரத்து உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் பலவும் உருவாக்கப்பட்டு இருந்தது.​ ஆண்டுதோறும் சுற்றுலா கோடை விழாவும் நடத்தப்பட்டு வந்தது.ஆனால்,​​ சுற்றுலாப் பயணிகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தும்,​​ தற்போது பயனின்றி கேட்பாரற்றுக் கிடக்கின்றன.​ ​
 
                        ரூ. 10 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட,​​ உப்பங்கழியில் உல்லாசப் படகு சவாரிக்கான படகுத்துறை சிதைந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.​ உல்லாசப் படகுகளும் உடைந்து ஓரங்கட்டப்பட்டுக் கிடக்கின்றன.​ ​ரூ.10 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட குழந்தைகள் பூங்காவில் அமைக்கப்பட்டு இருந்த சறுக்கு மரம்,​​ ஊஞ்சல் போன்றவையும் உடைந்து கிடக்கின்றன.​ ஊஞ்சல் பலகைகள்,​​ குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கான இருக்கைகள் அனைத்தும் சமூக விரோத சக்திகளால் எடுத்துச் செல்லப்பட்டுவிட்டன.​ அங்கு அமைக்கப்பட்டு இருந்த நீரூற்றுகளும் ஈரப்பதம் காணாமல் மூடங்கிக் கிடக்கின்றன.​ ​சில்வர் பீச்சில் என்.எல்.சி.​ நிறுவனம் ரூ.5 லட்சத்தில் அமைத்துக் கொடுத்த எழில்மிகு பூங்கா,​​ எங்கிருக்கிறது என்றே தெரியா வண்ணம்,​​ சிதைந்து காணாமல் போய்விட்டது. இத்தகைய சிதைவுகள் காரணமாக,​​ கடலூர் மக்களின் ஒரே பொழுதுபோக்கு இடமாகவும்,​​ சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும் அமைந்து இருந்த சில்வர் பீச் இன்று,​​ பொழுதுபோக்கு அம்சங்கள் இன்றி,​​ மூளியாகக் காட்சி அளிக்கிறது.​ ​ஆண்டுதோறும் 5 நாள்கள் சில்வர் பீச்சில் நடத்தப்பட்டு வந்த சுற்றுலா கோடை விழாவும்,​​ இரு ஆண்டுகளாக நடத்தப்படவில்லை.கடலூர் மக்களுக்கு கோடைக் காலத்தில் நல்லதொரு பொழுதுபோக்கு விழாவாக அமையும் இந்த விழா நடைபெறாதது,​​ கடலூர் மக்களை பெரிதும் ஏமாற்றத்தில் ஆழ்த்தி இருக்கிறது.இதில் மாவட்ட நிர்வாகமும் நகராட்சியும் கவனம் செலுத்தாதது ஏன் என்று தெரியவில்லை.​ ​
 
                        சில்வர் பீச்சில் எந்த பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாத நிலையிலும்,​​ இங்கு வரும் வாகனங்களுக்குக் கட்டணம்,​​ கால நேரமின்றி எப்போதும் வசூலிப்பதுதான் மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.​ ​கடல் அலைகளை ரசிக்க வருவோரிடம்,​​ கட்டணம் வசூலிக்கும் ஒரே கடற்கரை கடலூர் சில்வர் பீச்சாகத்தான் இருக்கும்.​ இங்கு வசூல் ஆகும் தொகை எவ்வளவு?​ இதற்கு நகராட்சி ஆண்டுதோறும் ஏலம் விடுகிறதா;​ நகராட்சிக்குக் கிடைக்கும் தொகை எவ்வளவு யார்;​ ஏலம் எடுத்து இருக்கிறார் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior