உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 08, 2010

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி

விருத்தாசலம்:

                      ஊர்க்காவல் படை சார்பில், புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் மரக்கன்று நடும் விழா விருத்தாசலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. பேரணியை ஊர்க்காவல் படை வட்டாரத் தளபதி கேதார்நாதன் தொடங்கி வைத்தார். விருத்தாசலம் பாலக்கரையில் தொடங்கிய பேரணி திரு.வி.க நகரில் முடிவடைந்தது. பினனர் திரு.வி.க. நகரில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாவட்டக் கல்வி அலுவலர் குருநாதன் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் துணை வட்டாரத் தளபதி ஜெயந்தி ரவிச்சந்திரன், கோட்ட தளபதி கோவிந்தராஜ், படை தளபதி ரவீந்திரநாதன், படை பிரிவு துணைத் தலைவர் தண்டபாணி, அணித் தலைவர் குமார், ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior