உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 08, 2010

கடலூர் அடுத்த களையூர் கிராமத்தில் நேற்று காலை கிராம மக்களுக்கு திடீர் வயிற்றுப்போக்கு:50 பேர் பாதிப்பு

கடலூர்:

                     வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். கடலூர் அடுத்த களையூர் கிராமத்தில் நேற்று காலை கிராம மக்களுக்கு திடீர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த சவுமியா, முத்தரசி, அஞ்சாலட்சி, சுகுணா, ராஜேஸ்வரி, ஏழைவள்ளி, தீபிகா, அகஸ்தியா, ராணி, கவுரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று சென்றனர்.க ளையூர் கிராமத்தில் உள்ள 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலைநீர் தேக்க தொட்டி திறந்த நிலையில் உள்ளது. இதை நீண்ட நாட்களாக சுத்தம் செய்யாமல் தண்ணீர் வினியோகம் செய்ததால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior