உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 08, 2010

எம்.பி.பி.எஸ். 18 ஆயிரம் மாணவர்களுக்கு நாளை ரேண்டம் எண்


               தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.​ படிப்பில் சேர ​விண்ணப்பித்துள்ள 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு புதன்கிழமை ​(ஜூன் 9) முன்னுரிமை வாய்ப்பு எண் ​(ரேண்டம் எண்)​ வழங்கப்படுகிறது.​
 
               பிளஸ் 2 தேர்வில் உயிரியல்-வேதியியல்-இயற்பியல் ஆகிய பாடங்களில் மாணவ-மாணவியர் பெற்ற ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் ​(கட்-ஆஃப்)​ அடிப்படையில் ​எம்.பி.பி.எஸ்.​ படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
 
இணையதளத்தில் வெளியீடு:​​ 
 
                   சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகம் தயாரித்து வரும் முன்னுரிமை வாய்ப்பு எண் ​(ரேண்டம் எண்)​ புதன்கிழமை ​(ஜூன் 9) காலை 11 மணிக்கு சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org  ​மூலம் வெளியிடப்படுகிறது.​ ஒரே ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண்ணை எடுக்கும் மாணவர்களை வரிசைப்படுத்தி ரேங்க் பட்டியல் வெளியிட ஏதுவாக,​​ முன்னுரிமை வாய்ப்பு எண் ​(ரேண்டம் எண்)​ வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது.​ இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்.-படிப்பில் சேர 18,230 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஜூன் 11-ல் ரேங்க் பட்டியல்:​ சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை ​(ஜூன் 11) ரேங்க் பட்டியல் ​வெளியிடப்படுகிறது. ​ மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலக வளாகத்தில் அன்றைய தினம் ரேங்க் பட்டியல் ஒட்டப்படும்.​ முதல் கட்ட கவுன்சலிங் வரும் ஜூன் 21-ம் தேதி தொடங்குகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior