உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 08, 2010

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

பண்ருட்டி : 

                கண்டரக்கோட்டை தென் பெண்ணையாற்றில் இருந்து மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர். பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை சப் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது கண்டரக்கோட்டை தென் பெண்ணையாற்றில் திருட்டு மணல் ஏற்றி வந்த டி.என்.45 ஏ.1499 எண்ணுள்ள லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அரசு அனுமதியின்றி டிப்பர் லாரியில் திருட்டு மணல் கடத்தியது தெரியவந் தது. இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்து கண்டரக்கோட்டையைச் சேர்ந்த டிரைவர் பாண்டியனை (20) புதுப்பேட்டை போலீசில் ஒப்படைத்தார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக் குப் பதிந்து பாண்டியனை கைது செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior