உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 08, 2010

கடலூரில் நரம்பியல் அறுவை சிகிச்சை குறித்த கருத்தரங்கு

கடலூர் : 

                   இந்திய மருத்துவச் சங்கம், சென்னை மலர் மருத்துவமனை சார்பில் நரம்பியல் அறுவை சிகிச்சை குறித்த தற்போதைய நிலை மற்றும் இருதய அறுவை சிகிச்சையில் தோல்வி குறித்த கருத்தரங்கு கடலூரில் நடந்தது.கிருஷ்ணா மருத்துவ மனையில் நடந்த கருத்தரங்கிற்கு இந்திய மருத்துவ சங்க செயலாளர் டாக்டர் சீனுவாசன் தலைமை தாங்கினார். கிருஷ்ணா மருத்துவமனை இயக்குனர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, கடலூர் அரசு மருத்துவமனை இணை இயக்குனர் டாக்டர் ஜெயவீரக் குமார், நிலைய மருத்துவர் டாக்டர் கோவிந் தராஜ் முன்னிலை வகித்தனர். கடலூர் இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் பார்த்தசாரதி, நரம்பியல் நிபுணர் டாக்டர் ரேணுகாதேவி, டாக்டர் கண் ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருத்தரங்கில் டாக்டர் ஸ்ரீதர் பேசுகையில் 

                   "10 ஆண்டுகளுக்கு முன் நரம்பியல் சிகிச்சையின் போது 10 சதவீதம் நோயாளிகள் சிகிச்சை பலனின்றி இறக்க நேரிட்டது. ஆனால் தற்போது தொழில்நுட்ப ரீதியில் வளர்ச்சியடைந்துள்ளதால் நவீன சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் இறப்பு சதவீதம் பாதியாக குறைந்துள்ளது. நரம்பியல் நோய்களுக்கு 60க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை முறைகள் கையாளப்பட்டு வருகிறது' என பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior